<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஈழம்</title>
	<atom:link href="http://eelam.net/index.php/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://eelam.net</link>
	<description>இனியும் தொடரும்..</description>
	<lastBuildDate>Wed, 27 Jan 2010 18:28:05 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2</title>
		<link>http://eelam.net/index.php/archives/75</link>
		<comments>http://eelam.net/index.php/archives/75#comments</comments>
		<pubDate>Wed, 27 Jan 2010 18:23:23 +0000</pubDate>
		<dc:creator>தாமரை காருண்யன்</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[சுவடுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=75</guid>
		<description><![CDATA[காரணம் தேடும் கட்டுரைத் தொடர்
அங்கம் &#8211; 1. மூச்சடங்கிப் போகும் வேளை
16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண பொது மக்கள் உடைக்கு மாறிக் கொண்டிருந்தனர்.
மாற்றுடையில்லாத போராளிகள் பொது மக்களிடம் இரவலாக உடையைக் கேட்டு வாங்கி, தமது இராணுவச் சீருடையைக் களைந்து வீசிவிட்டு பொது மக்களாக தம்மை மாற்றிக் கொண்டிருந்தனர்.
சயனைட் குப்பிகளையும் தூர வீசியெறிந்தனர். தம் வசமிருந்த ஆயுதங்களையும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/castro.jpeg"><img class="alignleft size-medium wp-image-76" title="castro" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/castro-300x262.jpg" alt="" width="300" height="262" /></a>காரணம் தேடும் கட்டுரைத் தொடர்</p>
<p>அங்கம் &#8211; 1. மூச்சடங்கிப் போகும் வேளை</p>
<p>16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி.</p>
<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண பொது மக்கள் உடைக்கு மாறிக் கொண்டிருந்தனர்.</p>
<p>மாற்றுடையில்லாத போராளிகள் பொது மக்களிடம் இரவலாக உடையைக் கேட்டு வாங்கி, தமது இராணுவச் சீருடையைக் களைந்து வீசிவிட்டு பொது மக்களாக தம்மை மாற்றிக் கொண்டிருந்தனர்.</p>
<p>சயனைட் குப்பிகளையும் தூர வீசியெறிந்தனர். தம் வசமிருந்த ஆயுதங்களையும் குழி தோண்டிப் புதைத்தனர். சிலர் அவற்றை ஆங்காங்கிருந்த சிறு புதர்களுக்குள் மறைத்து வீசினர்.</p>
<p>இவ்வாறு பொது மக்களாகத் தம்மை மாற்றிக் கொண்ட போராளிகள், இராணுவ கடடுப்பாட்டுப் பகுதியினை நோக்கி அணியணியாக நகர்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தினருடன் இணைந்து கொள்கின்றனர்.</p>
<p>பெருந்தொகையான புலிகளும் தமது உயிரைப் பாதுகாத்துக் கொள்ள, முள்ளி வாய்க்கால் பகுதியினை விட்டு மக்களோடு மக்களாக வெளியேறிக் கொள்கின்றனர்</p>
<p>&#8216;நான் இறுதிவரை நின்று போராடுவதாக முடிவெடுத்துள்ளேன். முற்றுகையை உடைத்து வெளியேற முயற்சி செய்வேன். நீங்களும் முற்றுகையை உடைத்து வெளியேற முயலுங்கள். இல்லையேல் உங்கள் உங்கள் முடிவுகளை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்&#8217; என விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளுக்குத் தலைவர் பிரபாகரன் 16.05.2009 அன்று அறிவுறுத்துகிறார்.</p>
<p>இத் தகவல் போராளிகளுக்கு மத்தியில் பரவுகிறது. இதன் பின்னர் போராளிகளில் ஒரு தரப்பினர் எடுத்த முடிவுகள், அவர்களை இராணுவத்தினரிடம் மக்களோடு மக்களாக கொண்டு போய்ச் சேர்த்தன.</p>
<p>இது நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மேலும் பெரும் தொகைப் போராளிகள் களமுனையில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருந்தனர். முற்றுகையை உடைத்துத் தப்புவதற்குரிய வழிவகைகளையும் ஆராய்ந்து கொண்டிருந்தனர்.</p>
<p>முற்றுகை மிக இறுக்கமாக இருந்தது. மிகப் பெருந்தொகையான இராணுவத்தினர் பல அடுக்கு வளையங்களாக முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சுற்றிவளைத்திருந்தனர்.</p>
<p>சீனாவிலிருந்து புதிதாய் இறக்கப்பட்டிருந்த 500 இராணுவ டாங்கிகள் இப் பகுதியைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. முற்றுகையை உடைப்பதானால் பல அடுக்கு வளையங்களை உடைத்தாக வேண்டும். இது சாத்தியமான விடயமாக இருக்கவில்லை. அவ்வாறு உடைத்து வெளியேறினால்கூட, ஏதோ ஒரு வகையில் இராணுவக் குகைக்குள் நுழையும் சூழலே பெரிதும் நிலவியது.</p>
<p>தமது கைளிலிருந்த ஆயுதங்களை விட – தாம் அமைத்திருந்த பாதுகாப்பரண்களை விட &#8211; ஒப்பீட்டளவில் பெரும் பாதுகாப்புக் கவசமாக விளங்கிக் கொண்டிருந்த மக்கள் வெளியேறிக் கொண்டிருக்க – உயிர் தப்புவது எனும் தெரிவைத் தவிர்த்து களமுனையில் அவர்கள் நின்று கொண்டிருந்தனர்.</p>
<p>இன்னும் ஒரு நாளாவது தம்முடன் நிற்குமாறு வெளியேறிக் கொண்டிருந்த பொது மக்களிடம் இப் போராளிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தமது உயிர் காக்கும் அவசரத்தில் ஒடிக் கொண்டிருந்த மக்கள் அவர்கள் கோரிக்கைக்கு பெரிதும் செவிசாய்க்கவில்லை.</p>
<p>இருந்தும் குழந்தைகள் உட்பட போராளிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பலர் வெளியேற மனமின்றித் தவித்து நிற்கின்றனர்.</p>
<p>சன சமுத்திர நீர் வெறியேற்றப்பட்டுவிட, போராளி மீன்கள் நீரின்றித் தவித்து நின்றன.</p>
<p>சிறிலங்காப்படைகளின் எறிகணைகள் தொடர்ச்சியாக வீழ்ந்து எரிமலைக் குழம்பாக அனல் கக்கிக் கொண்டிருந்தன.</p>
<p>10.05.2009. ஒரு ஞாயிற்றுக்கிழமை. மதிய நேரம்.</p>
<p>விடுதலைப்புலிகளின் அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் கஸ்ரோ அவர்கள், முள்ளி வாய்க்கால் பகுதியிலிருந்து புலம் பெயர் தமிழ் செயற்பாட்டாளர்களில் முக்கியமான சிலருடன் அவசரமாக உரையாடுகின்றார்.</p>
<p>செய்மதி மூலம் பெறப்பட்ட internet இணைப்பின் ஊடாக skype தொடர்பியினூடாக முள்ளிவாய்க்காலுடன் மேற்குலகம் இணைக்கப்பட்டிருந்தது.</p>
<p>&#8216;பச்சை&#8217; என விழிக்கப்படும் skype இன் ஊடாக &#8216;அப்பா&#8217; என இவர்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் கஸ்ரோ உரையாடிக் கொண்டிருந்தார்.</p>
<p>&#8216;நீங்கள் 10 இலட்சம் பேரும் வீதியில் இறங்கினால் யுத்தநிறுத்தம் வரும்&#8217; என கஸ்ரோ தனது உரையாடலில் வலியுறுத்துகிறார்.</p>
<p>ஜனவரி 2ம் திகதி, கிளிநொச்சி சிறிலங்கா படையினரிடம் வீழ்ச்சி அடையும்வரை, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் இராணுவ வியூகத்தினுள் சிறிலங்காப் படையினர் நன்கு சிக்குப்பட்டு வருகின்றனர் என்ற கருத்துத்தான் புலம் பெயர் தமிழ் மக்களிடம் மேலோங்கியிருந்தது.</p>
<p>இதனால், அதுவரை ஒரு சில அடையாள எதிர்ப்புப் போராட்டங்களும் கவனயீர்ப்புப் போராட்டங்களும் நடைபெற்றனவேயன்றி உயிர்ப்பான, எழுச்சிகரமான போராட்டங்கள் புலத்தில் பெரியளவில் நடைபெறவில்லை. கஸ்ரோவின் பொறுப்பிலிருந்த வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்புக்களும் இத்தகைய போராட்டங்களைப் பெரியளவில் ஒழுங்கு செய்யவுமில்லை. ஊக்குவிக்கவுமில்லை.</p>
<p>களத்தில் சிறிலங்கா இராணுவத்தை வெற்றி கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு வெளிநாட்டுக் கிளைப் பணியாளர்கள் ஓடியோடி நிதி சேகரித்துக் கொண்டிருந்தனர்.</p>
<p>கிளிநொச்சியின் வீழ்ச்சியின் பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. யுத்தநிறுத்தம் ஒன்று இல்லாமல் இயக்கத்தையும் மக்களையும் பாதுகாக்க முடியாது என்பதனை விடுதலைப்புலிகள் இயக்கம் உணரத் தொடங்கியது. மக்கள் நலன் கருதி நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதான நிலைப்பாட்டை எடுத்தது.</p>
<p>இதனால் மக்கள் நலன் கருதிய யுத்த நிறுத்தம் கோரி, போராட்டங்களை புலிகள் இயக்கத்தின் வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்புகள் முன்னெடுக்கத் தொடங்கின.</p>
<p>இதற்கிடையில், ஜனவரி 2009 இல் பலஸ்தீனத்தின் காஸாப் பகுதி மீது இஸ்ரேல் இரு வாரத் தாக்குதல்களை நடாத்துகிறது. அதற்கெதிராக உலகின் பல பாகங்களிலும் இஸ்ரேலைக் கண்டித்துப் பெரும் மக்கள் போராட்டங்கள் இடம் பெறுகின்றன. பின்னர் அங்கு யுத்த நிறுத்தமும் வருகிறது.</p>
<p>இவற்றை வன்னிப் பகுதியிலிருந்து செய்மதித் தொலைக்காட்சி மூலம் கஸ்ரோ பார்வையிடுகிறார். காஸாப்பகுதியில் யுத்தநிறுத்தம் வந்ததற்கு மக்கள் போராட்டம் முக்கிய காரணம் என்ற முடிவுக்குப் போகிறார். இதனால் வெளிநாடுகளில் மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தினால், இங்கும் யுத்த நிறுத்தத்தினைக் கொண்டு வரமுடியும் எனத் திட்டமிடுகிறார்.</p>
<p>புலம் பெயர் நாடுகளில் மக்கள் போராட்டங்களைத் தீவிரமாக்குமாறு, தன்னால் வெளிநாட்டுக் கிளைகளுக்குப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட, தனது பிரிவுப் போராளிகளுக்கு கட்டளையிடுகிறார்.</p>
<p>வெளிநாட்டுக் கிளைக் கட்டமைப்புப் பணியாளர்களுக்கு தான் விடுத்த செய்தியிலும் மக்கள் போராட்டத்தால் காஸாப் பகுதியில் யுத்த நிறுத்தம் வந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.</p>
<p>&#8216;ஏதாவது செய்து புலம்பெயர் நாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யுங்கள்&#8217; என, தனது பிரிவுப் போராளிகளுக்குத் தொடர்ச்சியாக கஸ்ரோ வலியுறுத்துகிறார்.</p>
<p>சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களால் கொல்லப்படும், காயப்படுத்தப்படும், இடம் பெயர்க்கப்படும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படும் நிகழ்வுகள் அதிகரித்தன.</p>
<p>செய்மதித் தகவல் தொடர்பு வசதிகள் இயக்கத்திடம் இருந்தமையால், சம்பவங்கள் நிழற் படங்களாகவும் காணொளிகளாகவும் இணையத்தளங்கள் ஊடாக மக்களை வந்தடையத் தொடங்கின.</p>
<p>இப் பின்னணியில்; புலம்பெயர் நாடுகளில் மக்கள் போராட்டங்கள் எழுச்சியடையத் தொடங்குகின்றன. இப் போராட்டங்கள் பற்றி இத் தொடரில் பின்னர் நாம் நோக்குவோம்.</p>
<p>எழுச்சியடைந்து வரும் மக்கள் போராட்டத்தை சுட்டிக்காட்டி, யுத்த நிறுத்தம் வருமென பிரபாகரனுக்கு நம்பிக்கை கொடுக்க முயல்கிறார் கஸ்ரோ. பிரபாகரன் இதை நம்புவதாக இல்லை. &#8216;எதற்காக அவர்கள் யுத்த நிறுத்தத்திற்கு இப்போது வரவேண்டும்&#8217; எனக் கேட்டு தனது நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துகிறார்.</p>
<p>யுத்தநிறுத்தத்தை விட பாரிய இராணுவ வெற்றி மூலம் இராணுவத்தை பின்னடைவுக்குட்படுத்தி நிலைமைகளைச் சாதகமாக்குவதே பிரபாகரனின் விருப்பமாக இருந்தது. இருந்த போதும் கள யதார்த்தம் பாதகமாக அமைந்து வந்தமையால் யுத்தநிறுத்தக் கோரிக்கையும் அவசியமாக இருந்தது.</p>
<p>மேலும், கஸ்ரோ 1991 ஆம் ஆண்டு இடம் பெற்ற ஆனையிறவுச் சமரில் காயமுற்று, இடுப்புக்குக் கீழே இயக்கம் இழந்திருந்த ஒரு மூத்த போராளி. இதனால் அவர் மேல் பிரபாகரனுக்கு ஒரு வகை அனுதாபம் இருந்தது.</p>
<p>இதனால் கஸ்ரோவை மனந்தளரச் செய்ய பிரபாகரன் விரும்பவில்லை. &#8216;எதற்கும் நீங்கள் முயன்று பாருங்கள்&#8217; என்று கஸ்ரோவின் முயற்சிக்குப் பச்சைக் கொடியும் காட்டுகிறார்.</p>
<p>மக்கள் பெருந்தொகையாகக் கொல்லப்படுவதனை முன்னிறுத்தி, மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தினால் யுத்த நிறுத்தம் வரும் என கஸ்ரோ நம்பினார். வேறு வழிகள் எதுவும் தென்படாமையும் அவரது நம்பிக்கைக்கு ஒரு காரணமாக இருந்தது.</p>
<p>இதனால் தான் 10.05.2009 அன்றைய உரையாடலிலும் &#8216;நீங்கள் 10 இலட்சம் பேரும் வீதியில் இறங்கினால் யுத்தநிறுத்தம் வரும்&#8217; என கஸ்ரோ குறிப்பிடுகிறார்.</p>
<p>யுத்த நிறுத்தத்திற்கான மாற்றுவழிகள் ஏதாவது உண்டா என செயற்பாட்டாளர் ஒருவர் தயங்கித் தயங்கிக் கேட்கிறார்.</p>
<p>&#8216;இங்கிருந்து இப்படித் தான் எம்மால் யோசிக்க முடிகிறது&#8217; என்கிறார் கஸ்ரோ. புதிய யோசனைகள் எதுவும் கலந்து பேசப்படவில்லை. skype கூட்டமும் முடிவடைகிறது.</p>
<p>மக்கள் போராட்டம் மேலும் தீவிரமடைகிறது. ஆனால், யுத்தநிறுத்தம் மட்டும் வந்தபாடாய் இல்லை.</p>
<p>15.05.2009. வெள்ளிக்கிழமை மாலை நேரம்.</p>
<p>முள்ளிவாய்க்கால் பகுதியில் களமுனைக்குத் தலைமை தாங்கி நின்ற தளபதி சூசை மலேசியாவில் இருந்த விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகள் பொறுப்பாளர் கேபியுடன் அவசர அவசரமாகத் தொடர்பு கொள்கிறார்.</p>
<p>(அடுத்த சனிக்கிழமை (30.01.2010) தொடரும்.)</p>
number of view: 9185]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/75/feed</wfw:commentRss>
		<slash:comments>525</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆயிரத்தில் ஒருவன் &#8211; தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்</title>
		<link>http://eelam.net/index.php/archives/71</link>
		<comments>http://eelam.net/index.php/archives/71#comments</comments>
		<pubDate>Wed, 27 Jan 2010 18:20:44 +0000</pubDate>
		<dc:creator>இரவி அருணாசலம்</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[பேசும் படம்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=71</guid>
		<description><![CDATA[ தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப் புதுசு. ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருக்கின்றது என்ற வகையான பேய்த்தனமான உளறல்கள் என்னிடம் இல்லை. ஆனால் இது தமிழில் புதிய தேடல், புதிய படைப்பு. முதலில் செல்வராகவனுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கைகளை இறுகப் பற்றியபடி மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டு அடுத்த பந்திக்குப் போகின்றேன்.
அதற்கு முன் ஒரு வாக்கியம், தயவுசெய்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/1001.jpeg"><img class="alignleft size-medium wp-image-72" title="1001" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/1001-300x181.jpg" alt="" width="300" height="181" /></a> தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப் புதுசு. ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருக்கின்றது என்ற வகையான பேய்த்தனமான உளறல்கள் என்னிடம் இல்லை. ஆனால் இது தமிழில் புதிய தேடல், புதிய படைப்பு. முதலில் செல்வராகவனுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கைகளை இறுகப் பற்றியபடி மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டு அடுத்த பந்திக்குப் போகின்றேன்.</p>
<p>அதற்கு முன் ஒரு வாக்கியம், தயவுசெய்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை திரையில் காண்க. ஏனென்றால், திரையில் மாத்திரமே அதன் முழுப் பரிமாணத்தையும் நாம் அனுபவிக்க முடியும். மற்றையது, இத்தகைய திரைப் படைப்புக்களின் வெற்றி மேலும் தரமான படைப்புக்கள் உருவாகக் காரணமாக அமையும்.</p>
<p>தமிழ்த்திரை சிறந்த படைப்பாளிகளை இப்போது இனம் காட்டுகிறது. பாலா, அமீர், செல்வராகவன், மிஸ்கின் ஆகியோர் இவர்களில் மிக முக்கியமானவர்கள். வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், கதிர், சசிகுமார், பாண்டிராஜ், வெற்றிமாறன் போன்றோரும் சிறந்த திரைப்படங்களைத் தந்திருந்தாலும் ஒரு திரைப்படத்துக்கு அப்பால் அவர்கள் நகரவில்லை. அதனால் இவர்களைக் கணிப்பிட முடியவில்லை. ஆனால், பாலா, அமீர், செல்வராகவன், மிஸ்கின் சில நல்ல திரைப்படங்களைத் தந்திருக்கிறார்கள். அதனால் இவர்களைக் கணிப்பிட முடிகிறது.</p>
<p>அக்கணிப்பில் செல்வராகவனுக்கு தனியிடம் உண்டு. &#8216;துள்ளுவதோ இளமை&#8217; திரைப்படத்தில் யார் இவர் என ஒரு கணம் யோசிக்க வைத்தவர். ஒரு திரைப்படத்தில் யாரும் எவரையும் உசுப்பிவிட முடியாது. அப்படிப் பலர் வருவார், போவார். ஆனால் அடுத்த திரைப்படத்தில் செல்வராகவன் தன்னை நிரூபித்து விட்டார். &#8216;காதல் கொண்டேன்&#8217; திரைப்படம் அதன் கச்சிதமான திரைப் பிரதியாலும், அதன் வெளிப்பாட்டு முறைமையாலும் தமிழில் முக்கியமான திரைப்படமாக அது ஆகிவிட்டது.</p>
<p>அவ்வாறே செல்வராகவனின் மூன்றாவது திரைப்படமான &#8216;7 G ரெயின்போ காலனி&#8217; நம்முள் ஒரு சலனத்தை அசைத்து விடுகிறது. இம் மூன்று திரைப்படங்களும் பதின்ம வயதுப் பருவக் கோளாறுகளை (teen age) அப்பட்டமாகப் படம்பிடித்து விடுகிறது. ஒரு வகையில் உளவியல் சிக்கல்களையும் இத்திரைப்படங்கள் அணுகியிருந்தன. பதின்ம வயதுக்கே உரிய &#8216;மண்ணில் கால் ஊன்றாத&#8217; காதல் கதைகளை மண்ணில் கால் ஊன்றிக் கதை செய்திருந்தார் செல்வராகவன்.</p>
<p>அவற்றை நல்ல திரைப்படங்களாகவும் படைத்திருந்தார். இம் மூன்று திரைப்படங்களும் செல்வராகவனின் சொந்த அனுபவங்களிலிருந்தும், அயலில் இரவல் பெற்ற அனுபவங்களிலிருந்தும் படைத்திருந்தார். அது சிறந்த படைப்பாக அமைவது சுலபமான காரியம் என்று சொல்லமாட்டேன். ஆனால் அதில் பிரசவவலி கொஞ்சமேனும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இம் மூன்று திரைப்படங்களிலிருந்தும் செல்வராகவன் இன்னுமொரு பெருங்காரியம் செய்தார். அது யுவன் சங்கர் ராஜா என்ற இசைக்கலைஞனை இன்னொரு பரிமாணத்துக்கு இட்டுச் சென்றது. மற்றையது தனுஸ் என்ற சிறந்த நடிகரை உருவாக்கியது. (7 G ரெயின்போ காலனி – தனுஸ் அல்ல)</p>
<p>தனுஸ் என்ற சிறந்த கலைஞனின் இன்னொரு பரிமாணம் தெரிந்த படம் &#8216;புதுப்பேட்டை&#8217;. செல்வராகவனும் சுய அனுபவங்களிலிருந்து விலகி, விளிம்பு நிலை மாந்தர்களின் அனுபவங்களை தன்னுள் வாங்கி சிறந்த படைப்பாகச் செதுக்கியிருந்தார். செல்வராகவன் &#8216;புதுப்பேட்டை&#8217;யில் நிகழ்த்தியது இன்னொரு பாய்ச்சலே. புதுப்பேட்டையில் எனக்குத் தெரிந்த ஒரேயொரு பலவீனம் திரைப்படப் பிரதி நிறைவு பெறாதிருந்ததே. அதாவது இத்திரைப்படத்தை நிறைவு செய்கையில் செல்வராகவன் தடுமாறியிருந்தார்.</p>
<p>ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துக்கு இம் முன்னுரை மிக நீண்டதென யாரும் அலுப்புக் கொள்ளலாம். இது செல்வராகவன் பற்றிய முன்னீடு என்றே குறிப்பிடலாம். முற்றும், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தையோ, காட்சிப் பிரிப்பையோ சொல்வதல்ல என் நோக்கம். விமர்சனமுமல்ல. பின் என்னவென்றால் இது என்னுடைய அனுபவப் பதிவு.</p>
<p>நான் இம்மாதத்தின் ஒரு ஞாயிற்றுக்கிழமை (10.01.10) &#8216;அவதார்&#8217; என்ற அற்புதமான திரைப்படம் பார்த்தேன். அது என்னை உலுப்பிவிட்டது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை (17.01.10) ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பார்த்தேன். பார்த்து திரையரங்கை விட்டு வெளியேறுகையில் மனம் களைத்துப் போய்க் கிடந்தது. &#8216;அவதார்&#8217; திரைப்படம் நிறைவடைந்து அரங்கை விட்டு வெளியேறும் போதும் இவ்வாறு தான் உணர்ந்தேன். அதற்காக இவ்விரு திரைப்படங்களையும் ஒப்பிடுகிறேன் என்றல்ல. அதுவேறு, இதுவேறு.</p>
<p>&#8216;ஆயிரத்தில் ஒருவன்&#8217; என்ன வகைக் கதை என்று சொல்ல முடியவில்லை. யதார்த்த வகைத் திரைப்படமே அல்ல. பின்நவீனத்துவக் கூறுகள், தொன்மங்கள், படிமங்கள் என்று தேவைக்கேற்ப கலந்த இன்னொரு கலவை. ஆனால் அவ்வெதுவுமே எவ்வகையிலும் உறுத்தலாக அமையவில்லை. அவ்வாறே தொழில்நுட்ப உத்திகளும் உறுத்திக் கொண்டே இருக்கவில்லை.</p>
<p>இத்திரைப்படத்திற்கு எனக்கு வேறொரு வியாக்கியானமும் (interpretation) உண்டு. என் அனுபவத்தில் இருந்து அதனைப் பார்ப்பதானால் அதனை நான் அவ்வாறு வியாக்கியானப்படுத்துகிறேனோ? அல்லது செல்வராகவனே அவ்வாறு வியாக்கியானப்படுத்தினாரா என்பதை யானறியேன். செல்வராகவனே அவ்வாறு வியாக்கியானப்படுத்தி இருக்கலாம் என்றே கருதுகின்றேன்.</p>
<p>&#8216;அவதார்&#8217; திரைப்படத்திலும் இது நிகழ்ந்தது. &#8216;அவதார்&#8217; திரைப்படம் முழுமையாகவே எனக்கு வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிப் போராகவே வியாக்கியானப்படுத்தப்பட்டது. அதுவே என்னை அதிகம் மனம் களைக்கச் செய்யக் காரணமாயிற்று. ஆனால் அவதார் இயக்குனர் ஜேம்ஸ் கமரூன் அப்படி நினைத்தாரல்லர். ஆனால் ஒன்றுண்மை. ஒடுக்கப்பட்ட மக்களையும், ஒடுக்கும் அதிகார வர்க்கத்தையுமே &#8216;அவதார்&#8217; சித்தரித்தது. அது வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி யுத்தத்துக்கும் பொருந்திப் போகிறது.</p>
<p>ஆனால், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் முற்றுமுழுதாக வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதி யுத்தத்தைக் காட்டுகிறது என்றே நான் கருதுகின்றேன். இத்திரைப்படம் தயாரிப்பில் இருந்த காலமும், இறுதி யுத்தம் நிகழ்ந்த காலமும் பெருமளவுக்கு ஒத்துப் போகிறது. ஒத்துப் போனவை வேறும் சில.</p>
<p>அழிக்கப்படுவது புலிக்கொடி ஏற்றிய சோழப் பேரரசு. அழிக்கப்படும் மன்னனின் பெயர் புலிக்கொடி வேந்தன். சோழ தேசத்து மக்களின் உணர்வெழுச்சியான போராட்டம். சோழ தேசத்து மக்களின் பட்டினிச்சாவு, அம்பும் &#8211; வில்லும் &#8211; வேலும் &#8211; வாளும் &#8211; கற்களும் கொண்ட சோழ தேசத்து மக்களின் யுத்தம். மிகநவீன ஆயுதங்களும், பல்லாயிரக்கணக்கான படைகளும் கொண்டு எதிரி சோழ தேசத்து மக்களை அழிக்கிறான். இறுதியுத்தம் கடற்கரையில் நிகழ்கிறது (முக்கால்வாசி). சோழ தேசத்து மக்கள் கடலினூடாக தங்களைக் காப்பாற்ற கப்பல்கள் வருமென்று காத்திருந்தல். யாவரும் அழிபட, கூட்டம் கூட்டமாக சங்கிலியால் பிணைத்து மக்களை அடைத்து வைத்தல் (முட்கம்பி வேலி). எதிரி சோழ தேசத்து மக்கள் குடிக்கிற தண்ணீரில் நஞ்சு கலந்து வஞ்சகமாகப் போர் புரிதல்.</p>
<p>இறுதியாக ஒன்று – புலிக்கொடி வேந்தனின் மைந்தனையும் அள்ளிக் கொண்டு முக்கியமான தளபதி காட்டுக்குள் போகிறான். &#8216;சோழ பயணம் தொடரும்&#8217; என்று எழுத்துக்கள் வரும்.</p>
<p>என் பார்வையில் &#8216;சோனியா காந்தியும்&#8217; வருகிறார். அது நுணுக்கமான பார்வையில்தான் புரிய முடியும். இவ்வாறெல்லாம் பகிர்வதற்கு நீங்களும் இத்திரைப்படத்தை பார்த்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் முழுப்பரிமாணத்துடன் இப்படத்தைப் புரியமுடியும்.</p>
<p>இவைகூட இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ்ச் சினிமாவை இத்திரைப்படம் புதிய தளத்துடன் இட்டுச் சென்றிருக்கிறது. இத்திரைப்படம் குறித்து நான் மூன்று சொல்வேன்.. புதிய பரிமாணம்! புதிய பரிசோதனை!! புதிய படைப்பு!!!</p>
<p>(17.01.10 ஞாயிறு &#8211; படம் பார்த்த அன்றே)</p>
number of view: 1842]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/71/feed</wfw:commentRss>
		<slash:comments>245</slash:comments>
		</item>
		<item>
		<title>வணக்கம் &#8220;மாமன்னரே”!</title>
		<link>http://eelam.net/index.php/archives/66</link>
		<comments>http://eelam.net/index.php/archives/66#comments</comments>
		<pubDate>Wed, 27 Jan 2010 18:18:01 +0000</pubDate>
		<dc:creator>கோபி</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[ஆயிரம் பூக்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=66</guid>
		<description><![CDATA[&#8220;சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது” &#8211; விஞ்ஞான மேதை அல்பேர்ட ஐன்ஸ்ரைன்.
இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா கமகே பாடிய &#8220;ஆயுபோவெவ மகரஜனாய் &#8230;” (வணக்கம் மாமன்னரே) என்று ஆரம்பிக்கும் பாடல் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. போரில் தமிழர்களை வென்றதற்காக மகிந்த இராஜபக்சவை மாமன்னராக உருவகித்து பாடும் வாழ்த்துப்பாவாக இப்பாடல் அமைந்திருக்கிறது. இப்பாடலின் வரிகளில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் சகலியின் குரலினிமைக்காக பாடலை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><em><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/rajapakse.jpeg"><img class="alignleft size-medium wp-image-67" title="rajapakse" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/rajapakse-240x300.jpg" alt="" width="240" height="300" /></a>&#8220;சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது” &#8211; விஞ்ஞான மேதை அல்பேர்ட ஐன்ஸ்ரைன்.</em></p>
<p>இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா கமகே பாடிய &#8220;ஆயுபோவெவ மகரஜனாய் &#8230;” (வணக்கம் மாமன்னரே) என்று ஆரம்பிக்கும் பாடல் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. போரில் தமிழர்களை வென்றதற்காக மகிந்த இராஜபக்சவை மாமன்னராக உருவகித்து பாடும் வாழ்த்துப்பாவாக இப்பாடல் அமைந்திருக்கிறது. இப்பாடலின் வரிகளில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் சகலியின் குரலினிமைக்காக பாடலை நீங்கள் ஒரு தடவையாவது கேட்கலாம். இப்பாடலினைப்போலவே, பெரும்பான்மையான சிங்கள மக்களும், போரினை வெற்றி கொண்டமைக்காக, தங்களது வாக்குகளால் மகிந்த இராஜபக்சவை வாழ்தியிருக்கிறார்கள்.</p>
<p>நடந்துமுடிந்த தேர்தல் முடிவுகள் &#8220;ஆட்சி மாற்றம்” வேண்டி நின்றவர்களுக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், இலங்கைத்தீவு பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுபட்டுக் கொண்ட நாளிலிருந்து நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் மக்கள் எவ்வாறு வாக்களித்துள்ளார்கள் என்பதனை அவதானிப்பவர்களுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆகவே சிலர் எதிர்பார்த்ததுபோல் நேற்றைய தினம் அங்கு அற்புதம் எதுவும் நிகழவில்லை.</p>
<p>மேலைத்தேச நாடுகளில், வீட்டு ஈட்டிற்கான வட்டி வீதம், வருமான வரி, அரச சேவைகள் போன்ற தனிநபர் பொருளாதர நலன்கள் தொடர்பில் கட்சிகள் எவ்வாறான கொள்கைத் திட்டத்தினை கொண்டுள்ளன என்பது அக்கட்சிகளுக்கு மக்களின் ஆதரவைத் தேடிக் கொடுக்கிறது. இவ்விடயங்களில் தமக்கு தோதான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளவர்களையே அவர்கள் தமது ஆட்சியாளர்களாகத் தெரிவு செய்கிறார்கள்.</p>
<p>இவ்விதமே, இலங்கைத் தீவைப் பொறுத்தவரை &#8220;தமிழர்கள்”, &#8220;அரிசி” ஆகிய இரண்டு விடயமுமே கட்சிகளுக்கான ஆதரவைத் தீர்மானிக்கும் முதன்மைக் காரணிகளாக அமைந்துள்ளன. மேலைத்தேச நாடுகளினைப்போல், அவ்வப்போது வெவ்வேறு விடயங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன என்கின்றபோதிலும், அவை வெற்றியை தீர்மானிப்பதில் இரண்டாந்தர நிலையில் வைக்கப்படுகின்றன.</p>
<p>1970 ம் ஆண்டு இலங்கைத் தீவில் நடைபெற்ற பொதுத்தேர்தலை எடுத்துக் கொண்டால், வாராந்தம் ஆளுக்கு இரண்டு இறாத்தல் அரிசியை இலவசமாகத் தருவோம் என்ற கோரிக்கையை முன்வைத்தே சிறிமாவோ தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி என்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சி, இடதுசாரி கட்சிகளின் கூட்டணி பெரு வெற்றி பெற்றது. 1977ம் ஆண்டுத் தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சி ஆளுக்கு தலா எட்டு இறாத்தல் தானியத்தை நியாயவிலையில் தருவோம் என ஆசைகாட்டியே வெற்றி பெற்றது,</p>
<p>தொடர்ந்து வந்த தேர்தல்களில் அரிசியைக் காட்டிலும் தமிழர் பிரச்சனையே முக்கிய இடத்தைப் பெற்றது. நாட்டில் போரை நிறுத்தி, சமாதானத்தை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடனேயே கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றின. நடந்து முடிந்த அதிபர் தேர்தலினைப் போலவே, &#8220;ஊழலை ஒழிப்போம்”, &#8220;குடும்ப ஆட்சியை ஒழிப்போம்” என்ற கவர்ச்சிகரமான கோசங்களும் அவ்வப்போது முன்வைக்கப்பட்டன. ஆனால் இவை முன்னையவையைப்போல் எக்காலத்திற்கும் பொருந்துபவையாக அமைவதில்லை.</p>
<p>இவ்விடத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்த நிலைபற்றியும் குறிப்பிடவேண்டும். அங்கு தமிழர்கள் (தமிழர்களின் அரசியல் உரிமைகள்) என்ற ஒற்றைச் சங்கதியே நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதில் அளவு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது. யார் தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்களோ அல்லது போராடுவதாக மக்களை நம்ப வைக்கிறார்களோ அவர்களையே மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.</p>
<p>1948ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை நடந்த தேர்தல்களின் அடிப்படையில் இதனை அறுதியிட்டுக் கூறலாம். அண்மையில் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தல்களில்கூட, நகரைப் பராமரிப்பதில் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்பதைக்காட்டிலும் தமிழர்களின் அரசியல் உரிமை பற்றியே பேசிக்கொண்டார்கள்.</p>
<p>இவ்வரலாற்றின் அடிப்படையில் சிறிலங்கா அதிபர் தேர்தலின் முடிவுகளை நோக்கினால் அவை ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்பதனை உணர்ந்து கொள்ளலாம். இரண்டு முன்னணி போட்டியாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதில் மக்கள் அக்கறைப்படாமல், தமிழர்களை வெற்றிக் கொண்டதில் யார் அதிக பங்காற்றினார் என்பதற்கான கருத்துக் கணிப்பாகவே இத்தேர்தலை எடுத்துக் கொண்டார்கள். ஆதலால் சிங்கள மக்கள், மகிந்த இராஜபக்சவே அதிக பங்காற்றியிருக்கிறார் என்று தமது கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள். தமிழர்களும் தங்கள் பங்கிற்கு சரத் பொன்சேகாவே குறைந்த பங்காற்றியிருக்கிறார் என்பதனை உறுதி செய்துள்ளார்கள். தமிழர்களிற்கு ஏற்பட்ட அழிவுக்கும், அவலத்திற்கும், இவ்விருவரும் சமபங்காற்றினார்கள் எனக்கருதிய பெரும்பான்மையான தமிழ் வாக்களார்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளார்கள்.</p>
<p>இலங்கைத்தீவில் உள்ள இனமுரண்பாட்டுக்கு, அமைதி வழியில், சனநாயக முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழர்களுக்கு வகுப்பெடுக்கிற மேற்குலக சக்திகள்கூட, எங்களுக்கு உபதேசிப்பதனை தாங்கள் நம்பவில்லை என்பதனை சரத் பொன்சேகாவை (மறைமுகமாக) களமிறக்கியதன் மூலம் நிருபித்துள்ளன. வேண்டுமானால் இவர்களின் ஆதரவாளர்களான மேட்டுக் குடியினருக்கும், குடிசார் சமூகம், மதபீடங்கள் என்பனவற்றுக்கும் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்காது என எண்ண இடமுண்டு. இருப்பினும் அவர்கள் சுதாகரித்துக் கொண்டு மகிந்தவிற்கு பின்னால் சென்று தங்களது நலனை பாதுகாத்துக் கொள்வார்கள்.</p>
<p>இங்கு மூக்குடைப்பட்டிருப்பது, இராசவரோதயம் சம்பந்தன் &#8211; மாவிட்டபுரம் சேனாதிராசா – சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பே. சரத் பொன்சேகாவுடன் இணைந்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாணப் போவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து அறிவித்து ஒரு வாரம்கூட ஆகவில்லை, அதற்குள் ஐன்ஸ்ரைனின் வரைவிலக்கணத்தை நிருபித்துக் காட்டியிருக்கிறார்கள்.</p>
<p>தேர்தலில் சிங்களக்கட்சி ஒன்றினை ஆதரிப்பதன் மூலம், சிங்கள மேலாதிக்கவாதிகள் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கி விடுவார்கள் எனின், ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து முப்பதாயிரம் மாவீரர்களையும் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்களையும் இழந்திருக்க வேண்டிய அவசியமேற்பட்டிருக்காது என்பதை இந்த தடித்த தோலுடையவர்கள் ஏன் உணர்கிறார்களில்லை?</p>
<p>ஏற்கனவே பலதடவைகள் ஏமாற்றப்பட்ட அனுபவம் கொண்ட தமிழரசுக்கட்சி இம்முறையும் ஏமாந்திருக்கிறதா? அல்லது தமிழ் மக்களை ஏமாற்ற முனைத்திருக்கிறதா? என்பதனை வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தீர்மானித்துக் கொள்வார்கள்.</p>
<p>சிங்கள தேசம் தமிழர்களின் உரிமைகளை சனநாயக வழிமுறைகளில் வழங்கும் சாத்தியப்பாடுகள் இல்லை என்பதும், அது நடைபெறாமல் இலங்கைத்தீவில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை என்பதனையும் சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டு தமிழ் மக்களின் இழந்த உரிமைகளை மீளப்பெறும் முயற்சிக்கு உதவவேண்டும்.</p>
<p>அது ஒன்றே இனப்படுகொலையை  எதிர்கொண்டுவரும் ஈழத் தமிழ் மக்களை காக்கும் என்பதனேயே தேர்தல் முடிவு பறைசாற்றி நிற்கின்றது.</p>
number of view: 41108]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/66/feed</wfw:commentRss>
		<slash:comments>4297</slash:comments>
		</item>
		<item>
		<title>யாரறிவார் வன்னிப் பெருந்துயரை&#8230;? துயர் 2</title>
		<link>http://eelam.net/index.php/archives/52</link>
		<comments>http://eelam.net/index.php/archives/52#comments</comments>
		<pubDate>Wed, 27 Jan 2010 18:04:12 +0000</pubDate>
		<dc:creator>சூரியன்</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[பார்வை]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=52</guid>
		<description><![CDATA[சொல்லியழ  எவருமின்றி!
யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.
அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/paarvai2.jpeg"><img class="alignleft size-medium wp-image-61" title="paarvai2" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/paarvai2-300x200.jpg" alt="" width="300" height="200" /></a>சொல்லியழ  எவருமின்றி!</strong></p>
<p>யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.</p>
<p>அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. பின்னாளில் ஈழப் போரின் முழுச் சுமையையும் வன்னி மக்கள் முதுகில் சுமந்தனர். இலட்சியத்திற்காக உயிர், பொருள், உடமை, உழைப்பு, எண்ணம், உணர்வு, சிந்தை, செயல், பந்தம், பாசம், அனைத்தையும் அம்மக்கள் ஈழப்போரட்டத்திற்கு ஆகுதியாக்கினர்.</p>
<p>எதிரியோ தனது அனைத்து வளங்களையும் மஹிந்த சிந்தனையின் பெயரால் ஒருங்கு திரட்டி உலகை அரவணைத்தும், வன்னியை தனிக்கப்பிடித்தும் தனது கோரப் பற்களை வன்னியின் மீது கவ்வவிட்டார். தனது அறிவையும், ஆற்றலையும், சூழ்ச்சியையும், தந்திரத்தையும் கொண்டு, உலகை தன் கையில் கதாயுதமாய் ஏந்திய எதிரி, அப்பாரிய கதாயுதத்தால் வன்னி மண்ணை ஓங்கி உதைத்தார். மண்ணும் மக்களும், பயிர்களும் உயிர்களும், காடும் வயலும், பொன்னும் பொருளும், ஊரும் பெயரும் என அனைத்தையும் எதிரி தன் யுத்தத் தேர்க்காலுக்கு இரையாக்கினார். வன்னி மக்கள் தேர்க்காலில் சிதைந்து ஊர முடியாத அட்டைகளாய் நசியுண்டு இழுபட்டனர்.</p>
<p>சொந்தங்களை இழந்தனர். பந்தங்களையும் பாசங்களையும் இழந்தனர். சொத்துக்களையும் பத்துக்களையும் இழந்தனர். பத்து என்பதில் மானமும், மரியாதையும் தமிழர் ஏற்றிப் போற்றும் அனைத்து விழுமியங்களும் அடங்குகின்றன. எதிரி தன் கோரப் பற்களை பாலியல் பலாத்காரத்தில் தெளிவாக பதித்துக் கொண்டான்.</p>
<p>மேலங்கிக்காக போராடப் புறப்பட்டு, கோவணத்தையும் பறிகொடுத்த கதையாய் தமிழ் மக்களின் துயரம் உள்ளது. இதில் வன்னிமக்களின் துயரம் உச்சாணிக் கொம்பாய் காட்சியளிக்கிறது. வன்னி என்பது ஒரு நிலநூல் சொல்லாக மட்டுமன்றி, தமிழீழப் போராட்டத்தின் ஒரு குறியீட்டுப் பதமாகவும் மாறிய சொல் அது. தமிழீழம் எனும் இலட்சியத்தையும், உலகத் தமிழினத்தின் கனவையும் காவிநின்ற மண்ணாயும், மக்களாயும், பதமாயும் வன்னி அமைந்தது.</p>
<p>கடித்துக் குதறப்பட்ட அந்த மக்கள் இன்று எதிரியின் காலடியில் வீழ்ந்து கிடப்போராய், கைவிடப்பட்டோராய், அன்னியர்களின் தயவுக்கு கையேந்தி நிற்போராய் காட்சியளிக்கின்றனர். இந்த மக்களின் துயரத்தை வரலாறு சரிவரப் பதிவுசெய்ய வேண்டும். எல்லாத் துயரும் அவர்களுக்கே என்று எழுதி வைத்தாற் போல, துயரப்பட்ட அந்த மக்களை நோக்கி, எல்லாக் கவனமும் அந்த மக்களுக்கே என்று முதலில் நாம் எமது வளங்கள் அனைத்தையும் அங்கு திருப்ப வேண்டும்.</p>
<p>&#8216;சுவர் இருந்தாற்தான் சித்திரம் வரையலாம்&#8217;. சிதைக்கப்பட்டிருக்கும் கிழக்கையும், வன்னியையும் கவனத்தில் எடுத்து அவர்களுக்கான வேலைத்திட்டத்தை முதலில் வகுப்பதே தமிழீழப் போராட்டத்தின் தலையாய பணியாய் தற்போது அமைய வேண்டும்.</p>
<p>வன்னிப் பெருந்துயரை எப்படிப் பதிவது. அது ஏடு தாங்காப் பெருந்துயரம். கடலாலும், காட்டாலும், இராணுவ வேலியாலும் சுற்றி மூடிக் கட்டப்பட்டிருந்தவர்கள் வன்னி மக்கள். இத்தகைய ஒரு கூட்டுக்குள் இருந்தும் அவர்கள் கூவத் தவறவில்லை. போரட்டத்திற்காக அனைத்துக் கடப்பாடுகளையும் அவர்கள் ஏற்றார்கள். எதிரியின் அனைத்துவகைத் திணிப்புகளையும் சுமந்தார்கள். எதிரியின் அனைத்து வகை பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் தமது பொருளாதாரத்தைப் போராட்டத்திற்கு ஈய்ந்தளிக்க அவர்கள் தயங்கவில்லை. தங்கள் தலைப் பிள்ளைகளை போராட்டத்திற்கு உரமாக்கினார்கள். விரும்பியும், விரும்பாமலும் போராட்டத்திற்கான ஆள்பற்றாக்குறைக்கு அவர்கள் தம் பிள்ளைகளை மேலும், மேலும் கொடுக்க நேர்ந்தது. எல்லாவற்றையும் இலட்சியத்துக்காகவே சுமந்தார்கள்.</p>
<p>பிள்ளைகள் மட்டும் களங்களில் நின்று போராடினார்கள் என்றில்லை. எல்லா வகையிலும் அவர்கள் போராட்டத்திற்கு முதுகு கொடுத்தார்கள். இயக்கம் அழைப்பு விடுத்த அத்தனை படைகளுக்கும் முது வயதிலும் அவர்கள் பங்காளியானார்கள். அதிகாலையில் முதியவர்கள் ஆண், பெண் வேறுபாடிறின்றி கொட்டனுடன் பயிற்சி எடுக்கும் காட்சிகளை மனித குல வரலாறு வன்னி மண்ணிற்தான் பதிவு செய்திருக்கிறது என்பதை எமது கண்கள் காணத் தவறக்கூடாது. பிள்ளை போர்க்களத்தில், தாயோ பயிற்சிக் களத்தில் என வரலாறு நகர்ந்தது.</p>
<p>இத்தனை தியாகங்களையும் செய்த இந்த மக்களின் முதுகெலும்பில் ஓடிய இந்தப் போராட்டம் ஏன் தோல்வி கண்டதென்பது ஒரு துயரமான கேள்வி. எங்கள் கண்களை நாங்களே துடைத்துக் கொண்டு, ஏன் தோல்வி கண்டோம்? ஏன் குற்றுயிராய்க் கிடக்கிறோம்? இனி எப்படி எழும்பி நடக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளை நாம் தவறாமல் கேட்டு, எம்மை நாம் சுதாகரிக்க வேண்டும்.</p>
<p>உதாரணத்திற்கு நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை இங்கு கூறுகிறேன். புதுக்குடியிருப்பு நோக்கிப் போகும் A 32 வீதியது. ரெட்பானா கழிந்து, புதுக்குடியிருப்பு நோக்கி போகும் அந்த வீதியில் உள்ள தேராவில் குளம் வீதியை முற்றிலும் மேவிப் பாய்கிறது. போக்குவரத்து அவ்விடத்தில் முற்றிலும் தடைப்பட்டுப் போய்விட்டது. காட்டுக்குள்ளால் ஒரு புதிய பாதையை சில தினங்களுக்குள் அமைத்து முடித்தாயிற்று. ஆனால் பாதை சேறும் சகதியும், முள்ளும் தடியும் நிறைந்ததாய் உள்ளது. அப்போதும் இராணுவம் தமது எறிகணைகளை கண்துஞ்சாது வீசிக்கொண்டிருக்கிறது.</p>
<p>புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து காட்டுப் பாதையினால் எனது உறவினரைத் தேடி வந்து கொண்டிருக்கிறேன். அப்போது காட்டுப்பாதை கடந்து குளம் மூடியுள்ள விளிம்பு வீதியில் ஏறுகிறேன். அந்த வேளை வீதியைக் குளம் மூடியிருக்கும். அந்த விளிம்பில் குந்தியவாறு, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அழுத வண்ணம் இருக்கிறார். நான் அவரை அணுகுகிறேன். அவரது தோளில் கையை வைத்தவாறு அவரை வினவுகிறேன்.</p>
<p>அப்போது அவர் பெரிதாக அழத்தொடங்கினார். அழுது கொண்டு ஆற்றவியலாத் தன் கொடிய துயரை நைய்ந்த குரலில் சொல்லத் தொடங்குகிறார். ரெட்பானா பிரதேசத்ததின் முற்பகுதியில் அவர் குடியிருந்தார். எறிகணை வீச்சில் இருந்து தப்புவதற்காக அங்கு மக்கள் இடம் பெயரத் தொடங்கினர். அதில் இவரது குடும்பமும் ஒன்று. அவ்வாறு இவரது குடும்பம் ஓடி வந்து கொண்டிருந்த போது அகோர எறிகணைவீச்சு நிகழத் தொடங்கியதால், வீதியோரத்தில் ஏற்கனவே புலம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் வீடு இருந்தது. அந்த வீட்டுக்குள் ஒரு சிறிய பதுங்குகுழி இருந்தது. அப் பதுங்கு குழிக்குள் தாயும், தந்தையும், மூன்று பிள்ளைகளும் என இக்குடும்பம் பதுங்கிக் கொண்டது.</p>
<p>சிறிது நேரம் கழிந்ததும் பதுங்குழியில் இருந்த ஒரு பிள்ளை தண்ணீர் கேட்டது. தகப்பன் அவ்வீட்டுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கச் சென்றார். அவ்வேளை ஓர் எறிகணை அந்த சிறிய பதுங்கு குழியின் மீது வீழ்ந்து வெடித்தது. தந்தை ஓடி வந்தபோது தாயும், மூன்று பிள்ளைகளும் அச்சிறிய பதுங்கு குழியில் துடிதுடித்து இறந்தனர்.</p>
<p>தந்தை பின்வருமாறு சொன்னார். &#8216;எனது கையால் எனது மூன்று பிள்ளைகளையும், எனது மனையையும் அந்த பங்கருக்குள் மூடிப்போட்டு வந்திருக்கிறேன். எப்படி ஐயா நான் தாங்குவேன். கொடிய கடவுள் என்னையேன் கொல்லவில்லை?&#8217;</p>
<p>மரணச்சடங்கு எதுவுமின்றி, கூட நிற்பார் யாருமின்றி, சொல்லியழ எவருமின்றி மூன்று பிள்ளைகளுக்கும், தாய்க்குமான  புதைகுழி மூடப்பட்டது.</p>
<p>ஆனால், சில வாரங்களின் பின்பு, புதைப்பார் அற்று கைவிடப்பட்ட நிலையில் ஆங்காங்கே பிணங்கள் அநாதரவாய் கிடந்த காட்சியைக் கண்ட போது புதைக்கப்பட்டோர் பாக்கியவான்களோ! என்று மனம் வியந்தது.</p>
<p>கதைகள் தொடரும்&#8230;.</p>
number of view: 1702]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/52/feed</wfw:commentRss>
		<slash:comments>232</slash:comments>
		</item>
		<item>
		<title>யாரறிவார் வன்னிப் பெருந்துயரை&#8230;! துயர் 1</title>
		<link>http://eelam.net/index.php/archives/55</link>
		<comments>http://eelam.net/index.php/archives/55#comments</comments>
		<pubDate>Wed, 20 Jan 2010 18:08:20 +0000</pubDate>
		<dc:creator>சூரியன்</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[பார்வை]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=55</guid>
		<description><![CDATA[1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.
&#8216;அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்&#8217; என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.
யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.
&#8216;சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு&#8217; என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/paarvai1.jpeg"><img class="alignleft size-medium wp-image-59" title="paarvai1" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/paarvai1-300x240.jpg" alt="" width="300" height="240" /></a>1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.</strong></p>
<p>&#8216;அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்&#8217; என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.</p>
<p>யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.</p>
<p>&#8216;சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு&#8217; என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. அதாவது கீரைக் கறிக்குள் அரசின் வரியிருக்கின்றது. நிலவரி தொடக்கம் தானிய வரி உட்பட சந்தை வரியீறாக கீரைக்குள் அரசியல் இருப்பதைக் காணலாம். பிறப்புப் பதிவது தொடக்கம் இறப்புப் பதிவது வரை, மணம் செய்வது தொடக்கம் பிரசவிப்பது வரை, வாழ்வு அரசியற் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டிருப்பதையே காணலாம். ஆதலால் எதனையும் அரசியலாகப் பார்க்கும் அணுகு முறை எதிலும் தலையாயது.</p>
<p>விஞ்ஞானமாயினும் சரி, இராணுவமாயினும் சரி அவை எதுவும் அரசியற் தீர்மானத்திற்கு கட்டுப்பட்டவையாகும். நடந்து முடிந்த தமிழின வன்னிப் பேரழிவை வெறுமனே இராணுவ அர்த்தத்தில் புரிந்து கொள்ளாமல், அதிகம் அரசியல் அர்த்தத்தில் புரிந்து கொள்ள வேண்டும். சிங்கள அரசின் வெற்றி ஓர் இராணுவ வெற்றியல்ல. உண்மையில் அது சிங்கள அரசின் ஓர் அரசியல் இராஜதந்திர வெற்றியே ஆகும். அவர்களது இராணுவ வெற்றியானது அவர்கள் தடம் அமைத்த அரசியல் வியூகத்துள் நிகழ்ந்த வெற்றியாகும்.</p>
<p>பார்வைக்கு சிங்கள அரசின் வெற்றி இராணுவ வெற்றி போல் தோன்றினாலும், உண்மையில் அது அவர்களுக்கோர் அரசியல் வெற்றியாகவும், தமிழர் தரப்புக்கோர் அரசியல் தோல்வியாகவுமே அமைந்துள்ளது. இராணுவத் தேரை சிங்களத் தலைவர்கள் அரசியற் குதிரை பூட்டி இராஜதந்திர சாரியால் சவாரி செய்துள்ளார்கள். பார்வைக்கு தேர் வென்றது போல தோன்றினாலும், உண்மையில் குதிரையின் பாய்ச்சலே பிரதானமானது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணர் தனது அக்குரோணி சேனைகள் அனைத்தையும் துரியோதனனிடம் கொடுத்துவிட்டு, தான் மட்டும் தேரோட்டியாய் பாண்டவர் பக்கம் நின்றதாகக் கூறப்படும் அந்த ஐதீகக் கதையில் அரசியல் அர்த்தம் இருக்கின்றது. இக்கதை வரலாறு அல்லாத ஓர் ஐதீகமேயாயினும் இதன் அரசியல் அர்த்தம் கவனத்திற்குரியது. தேர்ச் சாரதியின் பக்கமே வெற்றி பெற்றதாக கதை முடிகிறது.</p>
<p>சிங்களத் தலைவர்களிடம் பிரபாகரன் மட்டும் தோற்கவில்லை என்றும், பல நூற்றாண்டுகளாக தமிழ் தலைமைகள் அனைத்துமே தோல்வியடைந்து வருகின்றன என்றும் கூறப்படுவதுண்டு. இராமநாதன்கள் முதல் செல்வநாயகங்கள் ஈறாக பிரபாகரன்கள் வரை தொடர்ந்து ஈழத்தமிழர் தோல்வியடைந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டு வரும் பிரபலமான அரசியல் கூற்றானது அதிகம் கருத்தில் எடுக்கத் தக்கதாகும்.</p>
<p>&#8216;காலில் கல்லடித்து விட்டது என்பதை விடவும், கால் கல்லுடன் மோதிவிட்டது&#8217; என்று கூறுவதன் மூலம் காயத்திற்கான தன் பக்க நியாயத்தை கண்டறியும் அணுகுமுறையை கருத்தில் எடுத்தலும் அவசியம்.</p>
<p>எம்மத்தியில் நிகரற்ற வீரம் வெளிக்காட்டப்பட்டது, அளப்பெரிய தியாகம் புரியப்பட்டது, சொல்லிடவியலா அர்ப்பணிப்பும் காணப்பட்டது. ஆயினும் எம்மைச் சிங்கள அரசே நூற்றாண்டுக் கணக்காய் வெற்றி கொள்ளும் வரலாறு நீடிக்கிறது. எமது தலைமுறையில் இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.</p>
<p>இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வல்ல, இராணுவத்தீர்வே இறுதியானது எனக் கூறியோர் அரசியல் வியூகத்தால் சுற்றிவளைத்து இராணுவச் சப்பாத்துக்களுக்குள் தமிழரைக் கொண்டு வந்துவிட்டார்கள். குதிரையின் முதுகில் ஏறியிருந்து அதன் தலையைத் தடவி சவாரி செய்வது போல் இப்போது தமிழரின் முதுகில் ஏறிநின்று தலையைத் தடவுகிறார்கள். இராணுவச் சப்பாத்துக்களையே தமிழருக்கு பானம் பண்ணுவதற்கான பாத்திரமாக கையளிக்கிறார்களே தவிர, கௌரவமான வேறு எவ்வகைத் தங்க, வெள்ளி பாத்திரங்களையும் தீர்வாக கையளிக்கப் போவதில்லை.</p>
<p>வன்னித் தமிழனப் படுகொலை யுத்தத்தில் 90,000 மக்களைக் காணவில்லை. 2006 ஆம் ஆண்டில் யுத்தம் தொடங்கிய போது அங்கு 3,80,000 பேர் இருந்ததாக அரசாங்க உத்தியோகபூர்வ அறிக்கைகள் கூறுகின்றன. இதனை பல அரசாங்க உயர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் யுத்தம் முடிந்து தடுப்பு முகாமில் 2,70,000 பேர் இருப்பதாக அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பின்பு 2,61,000 பொதுமக்களும், 11,000 சரணடைந்த போராளிக் கைதிகளும் இருப்பதாக இறுதியாக அறிவித்தது. அதாவது தடுப்பு முகாங்களில் இருந்து பின்பு பிடிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் தொகையுடன் இத் தொகை இவ்வாறு அறிவிக்கப்பட்டது.</p>
<p>சரணடைந்த போராளிகளுள் ஒரு பெரும் தொகையினர் வன்னியின் கணக்குக்கு வெளியிலே இருந்து ஏற்கனவே இணைந்து போராளிகளாய் இருந்தோரும் அடங்குவர். எப்படியோ 3,80,000 பேருக்கு நாம் கணக்குக் கண்டாக வேண்டும். எஞ்சி இருக்கும் 2,70,000 பேருக்கும் அப்பால் (போராளிகள் தொகை உள் நீங்கலாகவோ அன்றி புற நீங்கலாகவோ என்ற சர்ச்சை ஒரு புறம் இருக்கட்டும்) 1,10,000 பேருக்கு கணக்குக் கண்டாக வேண்டும். இதில் குறைந்தது 90,000 பொது மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற அபாயகரமான கணக்கு எமக்கு தெரியவரும். இன்றைய தகவல் யுகத்தில் படுகொலை செய்யப்பட்வர்களது சரியான தொகையை கண்டறிவதில் கஸ்டம் இருக்க மாட்டாது.</p>
<p>சமாதான காலத்தில் கட்டுமானப்பணி, நிர்வாகப்பணி போன்ற பணிகளின் அடிப்படையில் வன்னிக்கு வேலை தேடி வந்தவர்களும், அவர்களது குடும்பங்களும் என ஒரு பெரிய தொகையின் கணக்கு உள்ளது. இத்தொகையினர் எத்தகைய அரசாங்கப் பதிவுகளிலும் இல்லை. மேலும் பிள்ளைகள் இயக்கத்தில் போராளிகளாக இருப்பதன் பெயரில் வன்னிக்கு வெளியே இருந்து உள்வந்தோரும், இராணுவ அச்சுறுத்தலுக்கு அஞ்சி அவ்வாறு உள்வந்தோரும் என அரச பதிவுக்குட்படாத இன்னொரு தொகையினரும் உண்டு.</p>
<p>மேலும் படுகாயம் அடைந்திருப்போர், வீட்டுக்கு வீடு மரணமடைந்திருப்போர், தம் சொத்துக்களையும் குடியிருப்புக்களையும் இழந்திருப்போர் என பாதிப்பின் பரிதாபம் வன்னிக்குள் நீடிக்கும் அதேவேளை வன்னிக்கு வெளியே உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழ்வோர் வன்னியில் மாண்டு போன தமது சொந்தங்களால் துயருறும் அளவும் கருத்திற்கெடுக்க வேண்டிய பெரும் கணக்குகளாகும். அதாவது வன்னிப் படுகொலையால் பாதிக்கப்படாதவன் என்று ஒரு தமிழன் இருக்க முடியாத அளவிற்கு வன்னிப் படுகொலையின் கொரூரம் அமைந்துள்ளது.</p>
<p>சிங்கள அரசியல் கலாச்சாரத்தின் படி தமிழ் மக்களுக்கு எந்தவித நியாயமான தீர்வையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அரசியல் மதிப்பீட்டில் கலாச்சாரத்தின் வலிமை முக்கியமானது. இந்தியாவின் கருவியாக தமிழரைப் பார்ப்பதன் வெளிப்பாடாகவே தமிழருக்கு எதிரான சிங்கள இனவாத அரசியல் காணப்படுகிறது. எனவே சிங்கள அரசியல் கலாச்சாரம் என்பது இந்திய எதிர்ப்பின் அடிப்படையிலான தமிழின எதிர்ப்பாக உள்ளது. இந்த வகையில் தமிழரை ஏமாற்றுவதை, தமிழரைத் தோற்கடிப்பதை, தமிழரை அழிப்பதை தமது அரசியற் கலாச்சாரமாக சிங்கள இனவாதிகள் கொள்கின்றனர். ஆதலால் அவர்களிடம் இருந்து தமிழர்கள் தமக்கு உரியதான உரிமைகள் எதனையும் ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது. சிங்கள தலைவர்களிடம் இருந்து நன்மையை எதிர்பார்ப்பதானது கண்களை கறுப்புத் துணிகளால் இறுக்கிக் கட்டிக் கொண்டு வானவில்லை ரசிப்பதற்கு ஒப்பானது. இது ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கும் பொருந்தும்.</p>
<p>இருப்பதில் இருந்துதான் அடுத்ததைத் தேடவேண்டும் என்பதற்கு இணங்க இராஜதந்திர அணுகுமுறைகளை நாம் நிராகரிக்கப் போவதில்லை. ஆதலால் சிங்களத் தலைவர்களிடம் எதையாவது எதிர்பார்ப்பதாயின் மேற்கண்ட விளக்கமும் அதற்கு பின்னணியாய் இருக்க வேண்டியது அவசியம். எமது மக்களை ஆயிரக்கணக்கான ஆண்டு கால தோல்வியில் இருந்து விடுவிக்க நாம் நல்மனத்துடனும், ஐக்கிய உணர்வுடனும், ஜனநாயக எண்ணங்களுடனும் பரந்துபட்ட மனித நேயச் சிந்தனையுடனும் செயற்பட வேண்டியது அவசியம்.</p>
<p>11.01.2010 இரவு 8:30</p>
<p><strong>2. புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது</strong></p>
<p>வன்னி மண்ணுக்கென ஒரு தனிமிடுக்கு வரலாற்றில் உண்டு. 1995 ஆம் ஆண்டு &#8216;றிவரஷ&#8217; இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து யாழ்ப்பாண மக்களும், மட்டக்களப்பு மக்களும் வன்னி மண்ணில் வன்னி மாந்தருடன் சங்கமிக்கத் தொடங்கினர். அந்த சங்கமிப்பில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்கள் திரண்டு இலட்சக் கணக்கில் வன்னி மக்கள் என அழைக்கப்படலாயினர். இந்த மக்களே ஒன்றரை தசாப்த காலமாய் யுத்தத்திற்கு நேரடியாய் முகங்கொடுப்போர் ஆயினர். வெளியுலகில் இருந்து பிரித்து அறுக்கப்பட்ட வன்னிக்கு உலகம் இருண்டிருந்தது. வெளியுலகின் கண்ணிற்கு ஒரு பாதாள உலகாய் அது காட்சியளித்தது. நெருக்கடிகள், துன்பங்கள், இழப்புக்கள், அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றிற்கு மத்தியில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைக் கீற்றுடன் மக்கள் வாழ்ந்தனர்.</p>
<p>அரசு பொருளாதாரத் தடைகளை விதித்தது. வெளியுலகத்துடன் வன்னிக்கான தொடர்புகளை அறுத்தது. மருந்தில்லை, உரிய உணவில்லை, கல்வியில்லை, அறிவியல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. வெறுமனே ஜீவாதார வாழ்வுக்கான அரிசி, பருப்பு என்பவற்றுடன் வன்னியின் கால்நடைகளும் மக்களைத் தக்கவைத்தன. அனைத்து சுமைகளும் மக்களின் தலைகள் மேல் சுமத்தப்பட்டன. எல்லாத் துயரங்களும் மக்களுக்கே என்ற நிலை ஏற்பட்ட போதிலும் மக்கள் சளையாது துயரத்திற்கு முகம் கொடுத்தனர்.</p>
<p>வன்னி அடையாள அட்டை என்றாலே அவர்கள் பாவக்கிரகத்து தீண்டத்தகாத மக்கள் என அரசு முத்திரை குத்தியது. உணவுத் தடையாலும், பொருளாதாரத் தடைகளாலும், மருத்துவத் தடைகளாலும் மற்றும் பெரும் இயற்கை நோய்களாலும் துயரத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் மீது விமானக் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. எறிகணைகள் மக்களை பதம் பார்த்தன. இராணுவ நடவடிக்கைகள் மக்களை ஊர்விட்டு ஊர் துரத்தின. மரணம் வீட்டுக்கு வீடு தவறாது நிகழ்ந்தது.</p>
<p>போராளிகளாய் பிள்ளைகள் யுத்தகளத்தில் சமராடினர். பெற்றோரும் மற்றோரும் யுத்தகளங்களில் பதுங்குகுழி அமைப்போராய் எந்நேரமும் மரணத்தை தழுவுவோராய் காணப்பட்டனர். இத்தனை துயரங்களின் மத்தியிலும் அவர்கள் மனம் சலிக்கவில்லை.</p>
<p>தாங்க முடியாத பொருளாதார சுமைகளும், யுத்த சுமைகளும் அவர்களின் முதுகை ஒன்றரை தசாப்தமாய் அழுத்திக்கொண்டே இருந்தது. குறைந்த வளத்துடனும் இத்துணை நெருக்கடிகளுடனும் மக்கள் வாழ்ந்த போதிலும் அவர்கள் அன்புக்கு குறைவற்றோராய் இலட்சியப் பற்றுமிக்கோராய் போராட்டத்தை நேசிப்போராய்க் காணப்பட்டனர்.</p>
<p>முழுத் தமிழீழ மக்களின் போராட்டச் சுமையையும் வன்னியில் வாழ்ந்த 4,00,000 மக்களே பெரிதும் சுமந்தனர். சிங்கள ஆட்சியாளர்கள் தாம் கொண்டிருந்த முழு அளவிலான இந்திய எதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையும் 4,00,000 வன்னிமக்கள் மீதே முழுமையாய் பிரயோகித்தனர். வன்னியின் வீழ்ச்சி தமிழரின் வீழ்ச்சியாயும், தமிழரின் வீழ்ச்சி எதிர்காலத்தில் இந்தியாவின் வீழ்ச்சியாகவும் அமையக்கூடிய அபாயம் உண்டு.</p>
<p>இவ்வாறு புரிந்துகொண்டால் வன்னி மக்கள் இப்பிராந்தியத்தின் சமாதானத்தையே தம் முதுகில் சுமந்திருக்கிறார்கள் என்ற உண்மையை வரலாறு எதிர்காலத்தில் தெரிந்து கொள்ளும். இக்கருத்துப் பின்னணியில் வன்னிப் படுகொலையை நாம் பார்க்க வேண்டும்.</p>
<p>கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களையும், ஒன்றரைத் தசாப்தமாய் தொலைந்து போன அவர்களது வாழ்வின் வசந்தங்களையும், மறைந்து போன பிஞ்சுகளையும், இளசுகளையும் அவர்களின் அபிலாசைகளையும் புரிந்து கொள்ள எமக்கு ஓர் இதயம் வேண்டும். &#8216;புள்ளிவிபரங்கள் இரத்தம் சிந்தாது&#8217; என்ற கூற்றுக்கிணங்க புள்ளிவிபரங்களைக் கடந்து துயரங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய ஒரு மனமும் அதற்கான ஒரு பண்பட்ட உள்ளமும் வேண்டும்.</p>
<p>எல்லா வெற்றிக்கும் தளமாய் அமைந்தவர்கள், எல்லாச் சுமையையும் முதுகில் சுமந்தவர்கள், தோல்வியின் வாயில் இரையாய்ப் போயினர். யாரறிவார் வன்னி மண்ணின் பெரும் துயரை&#8230;.!</p>
<p>11.01.2010 இரவு 10:00</p>
<p><strong>3. சிங்கள இராணுவத்தின் பாலியல் சுகபோக முகாம்.</strong></p>
<p>யாராலும் இதுவரை முக்கியத்துவப்படுத்தப்பட்டிராத சிங்கள இராணுவத்தின் செயல் திட்டம் ஒன்று இங்கு கவனத்திற்குரியது. பெண் போராளிகளை உயிருடன் கைப்பற்றுவதும், அவர்களை சிங்கள இராணுவத்தினரின் பாலியல் தேவைக்கு பலாத்காரமாய் பயன்படுத்துவது என்பதுமே அத்திட்டமாகும்.</p>
<p>இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் தாம் வெற்றி கொண்ட இடங்களில் பெண்களை கைது செய்து தமது இராணுவத்திற்கான சுகபோக முகாங்களை யப்பானிய இராணுவம் அமைத்துக் கொண்டது. இதுவரை இது உலகில் மிகப் பெரும் கண்டனத்திற்குரிய மனிதாபிமான பிரச்சினையாய் உள்ளது. (Japanese military comfort women) http://www.museology.org/japan.html. அதனைவிடவும் மோசமான முறையில் 21ஆம் நூற்றாண்டில் சிங்கள பௌத்த இராணுவம் தமக்கென சுகபோக முகாம் திட்டம் ஒன்றைச் செயற்படுத்தியுள்ளது.</p>
<p>காவல் கொட்டில்களிலும், எல்லைக் காவல் நிலையங்களிலும், யுத்த களங்களிலும் மற்றும் சுற்றி வளைப்புகளிலும் பெண் போராளிகளை இராணுவம் தமது இராணுவ உத்திகளைப் பயன்படுத்தி உயிருடன் பிடிப்பதில் அக்கறையாய் இருந்துள்ளது. அவ்வாறு பிடிக்கப்படும் பெண்களை முழு நிர்வாணமாகவே எப்போதும் அவர்கள் வைத்திருந்துள்ளனர்.</p>
<p>பெண் போராளிகளை இவ்வாறு அவர்கள் பிடித்ததும், தாம் பலாத்காரம் புரியப்போகும் செய்தியை எல்லையில் இருக்கும் ஏனைய ஆண் போராளிகளுக்கு அறிவித்துவிட்டு அவர்களது வோக்கிரோக்கியில் கேட்கக் கூடியவாறு பெண்கள் மீது பலாத்காரத்தைப் புரிவார்கள். அப்போது பெண்களின் அந்த அலறல் ஒலிகளை ஆண் போராளிகளுக்கு வோக்கிரோக்கி வாயிலாக கேட்கச் செய்துவிட்டு தமது அட்டகாசமான வார்த்தைப் பிரயோகங்களை சிங்களத்திலும், தெரிந்த தமிழிலும் பேசிக்காட்டுவார்கள். அவ்வாறு இராணுவத்தினர் பேசும் போதும் இழிவான வார்த்தைகளையும், தமது குதூகலத்தையும் வெளிப்படுத்துவது வழக்கம்.</p>
<p>இரட்டைவாய்கால் படுகொலைக் காலத்தில் படகின் மூலம் தப்பியோடிய போது ஒரு போராளியின் மனைவி படையினரால் பிடிக்கப்பட்டார். அப்பெண்ணை பற்றிய ஒரு நேர்முகப் பாலியல் வர்ணனையை வானொலியில் துடுப்பாட்ட வர்ணனை (commentary) சொல்வது போல கொச்சைத் தமிழில் வோக்கி வாயிலாக படையினர் செய்தனர். வன்னி வாய் பேசத் தொடங்கும் போது இத்தகைய கொரூரங்கள் மேலும் மேலும் வெளிவரும். இராணுவத்தினரே தமது ரசிப்புக்காக இவற்றை ஒளிநாடாக்களாக வைத்துள்ளதுடன் இவற்றை அவர்கள் வெளியிலும் பரவவிட்டுள்ளார்கள்.</p>
<p>பூலான்தேவியை தாகூர்கள் தமது வீட்டில் நிர்வாணமாக பணியாற்றச் செய்தது போன்ற சில சம்பவங்களை மட்டும் கேட்டு கண்ணீர் விட்ட எமது இதயங்கள் எமது தமிழ் பெண்களுக்கு நடந்திருக்கும் வெளிவராத இக்கதைகள் வெளிவரும் போது ஒரு பூலான்தேவியென்ன அதைப் போல் ஆயிரக்கணக்கான பூலான்தேவிகளை நாம் கண்ட துயரம் எமது மனங்களில் வடுவாய் வளரும். யாரெல்லாம் இதற்கு பதில் சொல்வார்கள்?</p>
<p>புனைகதைகளும், கற்பனைத் திரைப்படங்களும் கண்டிராத பெரும் பாலியல் கொடுமைகளும்; சித்திரவதைகளும் பௌத்தம் பேசும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் பெண்கள் மீது அரங்கேறியுள்ளன. ஊடகவியலாளர்களும், தகவல்பட தயாரிப்பாளர்களும், புலனாய்வு நிபுணர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் முனைப்புடன் ஈடுபட்டு இத்தகைய மனித குல விரோத பாலியல் கொடுமைகளையும், அநாகரிகங்களையும் வெளிக்கொணரும் காலம் வெகு தூரத்தில் இருக்காது என்று நீதி நியாயத்தின் பெயராலும், தர்மத்தின் பெயராலும், ஜனநாயகத்தின் பெயராலும் நம்புவோமாக.</p>
number of view: 4126]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/55/feed</wfw:commentRss>
		<slash:comments>630</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழப்போராட்டம் &#8211; தேங்கி நிற்கின்ற சுயவிமர்சனம்</title>
		<link>http://eelam.net/index.php/archives/38</link>
		<comments>http://eelam.net/index.php/archives/38#comments</comments>
		<pubDate>Sun, 17 Jan 2010 16:33:04 +0000</pubDate>
		<dc:creator>யமுனா ராஜேந்திரன்</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[தேடல்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=38</guid>
		<description><![CDATA[யமுனா ராஜேந்திரன்
உலகப் புரட்சிகர இயக்கங்கள் என எடுத்துக் கொண்டால், அக்டோபர் புரட்சி தொட்டு இன்று வரையிலும் இரண்டு மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
முதலாவது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் நிகழ்ந்து முடிந்த சோசலிசத்தின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக சோசலிச சீனா முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தையும், தனிநபர் சொத்துடமையையும் அங்கீகரித்திருப்பதனையும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னதாக ரஸ்யாவில் லெனின் பின்னரான ஸ்டாலினது அரசியல் காலம் பற்றியதும், சீனாவில் மாவோவினது அரசியல் காலம் பற்றியதுமான விமர்சனப் பின்னணி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div><strong><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/jamuna_eelam.jpeg"><img class="alignleft size-medium wp-image-40" title="jamuna_eelam" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/jamuna_eelam-300x240.jpg" alt="" width="300" height="240" /></a>யமுனா ராஜேந்திரன்</strong></div>
<p>உலகப் புரட்சிகர இயக்கங்கள் என எடுத்துக் கொண்டால், அக்டோபர் புரட்சி தொட்டு இன்று வரையிலும் இரண்டு மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.</p>
<p>முதலாவது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் நிகழ்ந்து முடிந்த சோசலிசத்தின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக சோசலிச சீனா முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தையும், தனிநபர் சொத்துடமையையும் அங்கீகரித்திருப்பதனையும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.</p>
<p>இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னதாக ரஸ்யாவில் லெனின் பின்னரான ஸ்டாலினது அரசியல் காலம் பற்றியதும், சீனாவில் மாவோவினது அரசியல் காலம் பற்றியதுமான விமர்சனப் பின்னணி இருந்தன என்பதையும் நாம் ஞாபகம் கொள்வோம்.</p>
<p>ஸ்டாலினது ஜனநாயக மத்தியத்துவ நெறிகளை மீறிய வன்முறைகள் குறித்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மிகாயில் குருச்சேவ் முன்வைத்த விமர்சனமும், பிற்பாடாக சோவியத் சமூகத்தின் அரசியலிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் மறுசீரமைப்பையும், வெளிப்படைத் தன்மையையும் (பெரஸ்த்ரோய்க்கா மற்றும் கிளாஸ்நாஸ்ட்) வலியுறுத்திய மிகாயில் கொர்பச்சேவின் விமர்சனமும் இருந்தன என்பதையும் நாம் ஞாபகம் கொள்வோம்.</p>
<p>மாவோவினது கலாச்சாரப் புரட்சி காலத்திய அறிவுஜீகள் மற்றும் கலைஞர்கள் மீதான வன்முறைகளையும், மாபெரும் பாய்ச்சல் காலத்தில் நிகழ்ந்த வெகுமக்கள் மரணங்களையும் குறித்த, மாவோவின் மரணத்திற்குப் பின்னரான டெங்சியாவோ பிங் தலைமை தாங்கிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனங்களையும் நாம் நினைவு கூர்வோம்.</p>
<p>இன்றைய ரஸ்யாவினது நிகழ் அரசியல் நீட்சியின் துவக்கத்தை நாம் குருச்சேவ், கொர்பச்சேவுக்கு முன்னர் டிராட்ஸ்க்கி அதற்கும் முன்பாக ரோஸா லக்ஸம்பர்க் போன்றவர்களிடமுமே நாம் காணமுடியும். மாவோவினது கலாச்சாரப் புரட்சி குறித்த விமர்சனங்கள் அவரது காலத்தில் சோவியத் மார்க்சியர்களாலும், மாவோவினது மரணத்தின் பின் கலாச்சாரப் புரட்சி கால மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும் குறித்து சீனத்தின் கலை, இலக்கியவாதிகளாலும், திரைப்படக் கலைஞர்களாலும் படைத்துக் குவிக்கப்பட்டிருக்கிறது.</p>
<p>ஸ்டாலினது காலம் குறித்ததும், மாவோவினது காலம் குறித்ததுமான விமர்சனங்களை, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சுயவிமர்சன மரபின்படி நிகழ்ந்தவைகளுக்குக் கூட்டுப் பொறுப்பேற்று, கம்யூனிஸ்ட் கட்சிகளே செய்து கொண்டன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.</p>
<p>ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் தனிமனிதர்களே ஆயினும், அவர்கள் தலைமையேற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் உள்ளார்ந்த அரசியல் பண்புகளின் மீதே அவர்கள் தோற்றம் பெற்றார்கள் என்பதனை அங்கீகரித்துக் கொண்டு, தலைமையேற்ற தனிநபர்களை மட்டுமே தூற்றிக் கொண்டிருக்காமல், அமைப்பு எனும் அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளையும், சமூகத்திற்கான அதனது பொறுப்புணர்வையும் மறுபரிசீலனைக்கு அல்லது சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக் கொள்வது என்பதாகவே இந்த சுயவிமர்சன நிகழ்வுகள் இருந்து வந்திருக்கின்றன.</p>
<p>புரட்சிகர இயக்கங்களில் நடந்த, வரலாற்று ரீதியில் சரி அல்லது பிழை என்பது குறித்த விமர்சனங்கள் என்பது இரண்டு தளங்களில் நடந்திருக்கிறது.</p>
<p>(அ). ஜனநாயக மத்தியத்துவம் என்பதனை அமைப்பு அறமாகக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள், நடந்தவைகளுக்குக் கூட்டுப் பொறுப்பேற்று இத்தகைய விமர்சனங்கள் கட்சியினாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.</p>
<p>(ஆ). புரட்சிகரச் செயல் போக்குகளில் பங்குபற்றிய கட்சி சாராத அறிவுஜீவிகளாலும், கல்வித்துறை சார் அறிவாளிகளாலும் இத்தகையை விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.</p>
<p>முதலாவது முறைமைக்கு ஸ்டாலின் குறித்த ரஸ்யக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனங்களையும், மாவோ குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனங்களையும் நாம் சுட்டுவோமானால், இரண்டாவது முறைமைக்கு சேகுவேராவின் கெரில்லா யுத்தக் குழு பற்றிய விமர்சனத்தை கட்சிக்கு வெளியிலிருந்து நேர்முறையில் முன்வைத்த பிரெஞ்சு அறிவுஜீயான ரெஜி டெப்ரேவின் விமர்சனத்தையும், பிறிதொரு நீட்சியிலிருந்து எதிர்மறை விமர்சனத்தை முன்வைத்த எல்சால்வடார் கவியும், கோட்பாட்டாளனுமான ரோக் டால்டனது பார்வைகளையும் நாம் குறிப்பிடலாம்.</p>
<p>ஒரு புறத்தில் வெகுமக்கள் கட்சியும், பிறிதொரு புறத்தில் புரட்சிகரக் குழுவும் என்பதாக இந்த விமர்சனங்கள் இருந்தன. இலத்தீனமெரிக்கச் சூழலில் குவேராவினது &#8216;கெரில்லாக்குழுக் (போகோ தியரி) கோட்பாட்டை&#8217; முன்வைத்து இந்த விமர்சனங்கள் நடந்தன எனில், ஆப்ரிக்கச் சூழலில் பிரான்ஸ் பெனானின் &#8216;விடுதலை நோக்கிய வன்முறை உளவியல்&#8217; பற்றியதாக இந்த விமர்சனங்கள் இருந்தன.</p>
<p>கட்சி சார்ந்தும், கட்சிக்கு வெளியிலாக புரட்சிகர அறிவுஜீகள் சார்ந்தும் இரு முனைகளிலுமாக நடைபெற்ற இந்த விமர்சனங்களின் பண்பு என்பது இதய சுத்தியுடனான சுயவிமர்சனப் பண்பு தான். இந்த சுயவிமர்சனப் பண்புக்காகச் சில சமயங்களில் உயிரைக் கொடுத்தவர்களும் உண்டு. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் காஸன் கனாபாணியும், எல்சால்வடார் விடுதலை இயக்கத்தில் ரோக் டால்டனும் இப்படித் தமது இயக்கத்தவர்களாலேயே துரோகிகள் எனக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.</p>
<p>அரசியல் துரோகிகளைக் கொன்றவர்களின் பட்டியல் ஸ்டாலின், மாவோ முதல் சே குவேரா வரையிலும் இருக்கவே செய்கிறது. துரோகிகளை புரட்சியின் எதிரிகள், சலுகைகளை அள்ளி வழங்குதல் எனும் நைச்சியமான வழிமுறைகளில் (அரசு மற்றும் எதிர்புரட்சிக் குழுக்கள்) திட்டமிட்டு உருவாக்கவும் செய்கிறார்கள்.</p>
<p>எனினும், ஒரு புரட்சிகர இயக்கம் தொடர்ந்து தம்மியக்கத்தின் இடையிலிருந்தும், வெளியிலிருந்தும் வகைதொகை இல்லாமல் துரோகிகளை உற்பத்தி செய்து உருவாக்கித் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தால், அது புரட்சிகர இயக்கம் என்பதிலிருந்து ஒரு கொலைக் குழு என்கிற நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதனை நாம் சாதாரணமாகவே கண்டு கொள்ள முடியும்.</p>
<p>இவ்வாறான நிலையிலிருந்து நோக்குகின்ற போது, புரட்சியின் துரோகிகள் பற்றிய நிலைப்பாட்டில் மாவோ, குவேரா போன்றோருக்கும் ஸ்டாலின், போல்பாட், சதாம் குசைன், போன்றோருக்கும் இருக்கும் வித்தியாசங்களை நாம் உணர முடியும். பின்னவர்கள் வரலாற்றில் முன்னவர்கள் பெற்ற இடத்தினைப் பெறாதது மட்டுமல்ல, தத்தமது தேசத்தின் வெகுமக்களிடத்தும், அரசியல் அறிந்தவரிடத்தும் தீராத அவப்பெயரையே இவர்கள் வரித்துக் கொண்டார்கள்.</p>
<p>இந்தியாவில் எழுபதுகளின் மத்தியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அரசினால் கொண்டு வரப்பட்ட அவசர நிலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. அரசியல் ரீதியில் அவசர நிலையை ஆதரித்தது மட்டுமல்ல, இந்திரா காந்தியின் நடவடிக்கைகளை விமர்சிப்பது இந்தியாவின் வலதுசாரி பாசிஸ்ட்டுகளுக்கும், அமெரிக்க ஆதரவாளர்களுக்கும் சாதாகமாகிவிடும் எனக் காரணம் சொல்லி, இந்திரா காந்தி அரசின் உள்நாட்டு பாசிச நடவடிக்கைகளையும், மனித உரிமை மீறல்களையும், சிவில் உரிமை அழிப்பையும் விமர்சிக்காது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மௌனமாக இருந்தது. அதற்கான விலையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விரைவிலேயே கொடுக்க நேர்ந்தது.</p>
<p>இந்திரா காந்தியை இந்திய மக்களே தூக்கி எறிந்தனர். அவசர நிலைக் காலத்தில் நடந்த கொடுமைகள் கம்யூனிஸ்ட்டுகள் அதனை ஆதரித்தற்காக அவர்களைத் தலைகுனிய வைத்தது. வெளிநாட்டுக் கொள்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனவும், முற்போக்கு எனவும்; பேசுகிற ஒருவர் உள்நாட்டில் படு பிற்போக்குவாதியாக இருக்க முடியும் என்பதற்கான சான்றாக இந்திரா காந்தியின் அவசர நிலைக்கால நடவடிக்கைகள் அமைந்தன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. அதிகாரபூர்வ அவசர நிலைக் காலத்தை ஆதரித்ததற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்தது. இது தொடர்பான தீர்மானத்தையும் அமைப்பு ரீதியாக அது ஆவணப்படுத்தியது.</p>
<p>சுயவிமர்சனம் எனும் நடைமுறை புரட்சிகரக் கட்சிகளில் மட்டுமே நிகழ்முறையாக இருக்கவில்லை. வலதுசாரி இயக்கங்களிடமும், பாசிஸ்ட்டுகளிடம் கூட தமது அமைப்பின் திட்டங்கள் சார்ந்து, தமது தோல்விகளை முன்வைத்து, ஒரு வகையிலான மீள்நோக்கு எனும் அடிப்படையிலோ அல்லது தமது எதிர்கால அரசியலை மறுதகவமைத்துக் கொள்வது எனும் வகையிலோ இத்தகைய சுயவிமர்சனங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்திய நிலைமையில் பிஜேபி போன்ற இந்து பாசிஸ்ட்டுகளும், வலதுசாரிகளும் தமது ஆதரவாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இதில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தமது தோல்விகளையும், திட்டங்களையும் ஒரு போதும் வெகுமக்களிடத்தில் வெளிப்படையாக முன்வைப்பதில்லை.</p>
<p>புரட்சிகர இயக்கங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் தமது கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பான விமர்சனச் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்கள் உள்ளரங்குகளிலும், உள்வட்டங்களிலும் நடைபெற்றாலும் கூட, தமது அரசியல் வெகுமக்கள் நலன் சார்ந்தது எனும் அடிப்படையில் தமது தோல்விகள் குறித்தும், தமது அரசியல் தவறுகள் குறித்தும் வெகுமக்களிடம் அவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் தவறுவதில்லை.</p>
<p>ஈழத்தில் முப்பதாண்டுகால விடுதலைப் போராட்டம் நடந்து, ஆயுதப் போராட்ட அரசியல் அழிவில் முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கிலான வெகுமக்களும், போராளிகளும் மரணமுற்றிருக்கிறார்கள். ஈழத்தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான நியாயங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் பெருந்தேசிய ஒடுக்குமுறையும் ஆரம்பித்த அரசியல் நிலையிலேயே இருக்கிறது.</p>
<p>ஈழத்தமிழர்களின் அரசியலைப் பொறுத்து எதுவும் மாறிவிடவில்லை. சிங்கள அரசும், சிவில் சமூகமும், நிறுவனங்களும் மேலும் இனவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. விடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் நூறு நூறாக இருந்த அரசியல் முரண்பாடுகள் இன்றைய ஈழத்தமிழர் அமைப்புக்களுக்குள் பல்லாயிரமாகப் பல்கிப் பெருகியிருக்கிறது.</p>
<p>அடிப்படைத் தேவைகளுக்காக அல்லலுறும் ஒரு மக்கள் கூட்டமாக ஈழ நிலப்பரப்பினுள் வாழும் தமிழ் மக்கள் விட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் கோரிக்கைகள் என்பது ஈழத்தில் வதியும் மக்களைப் பொறுத்து பல பத்தாண்டுகள் பின்தள்ளப்பட்டிருக்கிறது. ஈழ நிலப்பரப்பில் வாழும் தமிழர்களின் நோக்கும், தேர்வும், முன்னுரிமைகளும், புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் மக்களின் நோக்கும், தெரிவும், முன்னுரிமைகளும் முற்றிலும் பிளவுண்டு கிடக்கிறது.</p>
<p>தீர்வு என்பது பௌதீக ரீதியில் ஈழ மண்ணில் தான் நடைமுறைக்கு வரவேண்டும். புலம்பெயர்ந்த மக்கள் ஈழ மண்ணில் வாழும் மக்களுடன் உயிரூக்கமுள்ள தொடர்புகளைப் பேணுவதென்பது, ஈழமண்ணில் வாழும் மக்களது தேர்வுடனும், முன்னுரிமைகளுடனும், அவர்களது எதிர்கால நோக்குடனும் இணக்கப்படுத்திக் கொள்வதால் மட்டுமே ஸ்தூலமான விளைவுகளைத் தரவல்லது. புகலிட அரசியல் என்பது, இரத்தமும், சதையும், நிணமும், வேதனையுமாக வாழும் ஈழ மண்ணில் வாழும் மக்களிடம் கருத்தியல் மேலாண்மை அல்லது அரசியல் மேலாண்மை எனும் அளவில் வெளியிலிருந்து திணிக்கப்பட முடியாதது. விளைவுகள் எத்தகையதானாலும் அதனை எதிர்கொள்ளும் நிலையில் விட்டுவைக்கப்பட்டிருப்பவர்கள் ஈழமண்ணில் வாழும் தமிழர்கள் தான்.</p>
<p>புகலிடத்தில் மேற்கொள்ளும் எத்தகைய அரசியல் நிலைபாடுகளும் இதனைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத போது, வெறுமனே வெற்று கோஷங்களாகவே எஞ்சி நிற்கும் என்பது மட்டுமல்ல, ஈழ மண்ணிலுள்ள மக்களது வாழ்வில் மீளவும் துயர்களையே கொண்டு வந்து சேர்க்கும். இந்த வரலாற்று நிலையில் நின்று நோக்கும் போது, ஈழத் தமிழர் சமூகத்தினுள், அழிவில் முடிந்திருக்கிற அவர் தம் ஆயுதப் போராட்ட அரசியலின் தோல்வி அல்லது அழிவு குறித்து, நடைபெற்றே தீரவேண்டிய சுயவிமர்சனம் என்பது நடைபெறாமலேயே தேங்கி நிற்பதனை நாம் அவதானிக்க முடியும்.</p>
<p>எவரும், விமர்சனத்தை மேற்கொள்வதற்குள் முன்னால், அத்தகைய சுய விமர்சனத்தை மேற்கொள்வதற்கான நெறிமுறை என்ன என்பது குறித்த தெளிவுறுத்தலும் நமக்கு இருத்தல் வேண்டும்.</p>
<p>விமர்சனத்தை மேற்கொள்கிறவன் ஒளிவட்டம் கொண்ட தூயவன், விமர்சனத்துக்கு ஆட்படுத்தப்படுகிறவன்; முழுமையும் இருண்டவன் என்கிற அணுகுமுறை இதற்குப் பயன்படாது. வெற்றிகளுக்கெல்லாம் உரித்துடைய உன்னதர் ஒருவர், தோல்விகளுக்கு பிறமூடர்களே காரணம் எனும் அணுகுமுறையும் சரியாகாது. வெற்றிகள் போலவே தோல்விகளுக்கும் ஓர் உன்னதர் அல்லது இருண்மையானவரே காரணம் என்கிற கோருதல்களும் வரலாற்றுப் பார்வை ஆகாது.</p>
<p>ஓரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வில், தனிநபரும், நிறுவனங்களும், கருத்தியலும் வகிக்கும் பாத்திரம் எத்தகையதாக இருக்க முடியும் என்பது குறித்த தெளிவுறுத்தல் இத்தகைய விமர்சனங்களுக்கு அடிப்படையானதாகும்.</p>
<p>வரலாற்றைத் தனிமனிதன் பாதிக்கிறான். எனினும், தனிமனிதன் வரலாற்றை உருவாக்குவதில்லை. எந்தத் தனிமனிதனும் குறிப்பிட்ட வரலாற்றுக்குச் சாதகமான வகையில் எதிர்விணை செய்கிறான் என்கிற அளவிலேயே ஒரு தனிமனிதன் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் &#8216;கூட்டுக்குரலாக&#8217; ஆகமுடியும். கிட்லரையும், ஸ்டாலினையும் மட்டுமல்ல, சே குவேராவையும், மாவோவையும் கூட நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.</p>
<p>ஈழவிடுதலைப் போராட்டமும், அதற்குத் தலைமை தாங்கியவர்களும் குறித்த விமர்சனம்; என்பதும் இந்த அடிப்படைகளில் இருந்து தான் துவங்க வேண்டும்.</p>
<p>அனைத்துக்கும் மேலாக, விமர்சனம் என்பதன் அவசியம் என்ன? சுயவிமர்சனத்தின் தேவை என்ன? எதற்காகச் சுயவிமர்சனம் செய்து கொள்கிறோம் என்பது குறித்த தெளிவும் மிக மிக முக்கியமானதாகும். இத்தகைய விமர்சனத்துக்கான மொழி வசவுமொழியாக, தண்டனைகோரும் மொழியாக இருக்கமுடியாது. இவ்வகையில், விமர்சனத்தின் நோக்கு குறித்த தெளிவு ஒருவருக்கு மிக அவசியமானதாகும்.</p>
<p>அரசியல் வெளிப்படைத்தன்மையும், நேர்மையாகத் தவறுகளையும், போதாமைகளையும் ஒப்புக்கொள்ளும் தன்மையும் ஓர் அரசியல் தலைமைக்குரிய பண்பாகிறது.</p>
<p>நடந்து முடிந்த பேரழிவு தவிர்க்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களை நாம் விமர்சனத்தின் வழி கண்டடைய முனைகிறோம். புதிய வரலாற்று நிலைமைகளுக்கு ஒப்ப எவ்வாறான அமைப்பு முறையை தேர்ந்து கொள்ளப் போகிறோம், எத்தகைய அரசியல் முன்னுரிமைகளை தேர்ந்து கொள்ளப் போகிறோம், இலக்குக்கும் வழிமுறைக்குமான பதட்டமான முரணை எவ்வாறு அணுகப்போகிறோம் என்பதனைக் குறித்துத் திட்டவட்டமான புரிதலுக்கு வருவதற்காகவே நாம் விமர்சனத்தை மேற்கொள்கிறோம்.</p>
<p>எந்த நிகழ்வும் தனித்த, சார்பு நிலையற்ற நிகழ்வுகள் இல்லை. ஓன்றின் தொடர்ச்சியாகவும், விளைவாகவுமே பிறிதொரு நிகழ்வு நிகழ்கிறது. ஓரு நிகழ்வைத் தீர்மானிப்பதில் அகக் காரணிகள் போலவே புறக்காரணிகளும் பாத்திரம் வகிக்கிறது. ஓரு நிகழ்வைப் புரிந்து கொள்ள இரண்டும் பற்றின பிரக்ஞை என்பது அவசியம். ஓன்றைப் புறக்கணித்து பிறிதொன்றை முழுமையாகப் பற்றி நிற்பதன் மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வைப் புரிந்து கொள்ள முடியாது.</p>
<p>அகக் காரணிகள் தனித்த தன்மை கொண்டதெனில் புறக்காரணிகள் ஒப்பீட்டுத் தன்மையும், நாம் கற்றுக் கொள்ளும் தன்மையும் வாய்ந்தவை. ஈழ விடுதலைப் போராட்டம் தனது மண்சார்ந்த, தனது வரலாறு சார்ந்த பரிணாமும் தனித்தன்மையும் கொண்டிருந்த போதும், அது உலகப் புரட்சிகரப் போக்கிலிருந்து முற்றிலும் விலகியதொரு நிகழ்வுப்போக்கு இல்லை. அது ஒரு விடுதலைப் போராட்டமாக எதிர்கொண்ட அமைப்பு சார்ந்த, அரசியல் சார்ந்த பல அணுகுமுறைகள் பிற விடுதலைப் போராட்டங்களுடன் ஒப்பு நோக்கத்தக்கன. இந்தப் புரிதல்களுடன் தான் ஈழவிடுதலைப் போராட்டம் குறித்த விமர்சனமும், சுயவிமர்சனமும் மேற்கொள்ளப்பட வேண்டும்.</p>
<p>இதுவே சுயவிமர்சனத்திற்கான  ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.</p>
number of view: 1260]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/38/feed</wfw:commentRss>
		<slash:comments>468</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?</title>
		<link>http://eelam.net/index.php/archives/16</link>
		<comments>http://eelam.net/index.php/archives/16#comments</comments>
		<pubDate>Sun, 17 Jan 2010 14:43:57 +0000</pubDate>
		<dc:creator>தாமரை காருண்யன்</dc:creator>
				<category><![CDATA[Featured]]></category>
		<category><![CDATA[சுவடுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=16</guid>
		<description><![CDATA[காரணம் தேடும் கட்டுரைத் தொடர்&#8230;.
நுழைவாயிலில்&#8230;..
நமது சமகால நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சிதான் இது. உணர்ச்சிவயப்பட்டோ, அல்லது பரபரப்புத் தேடியோ மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியல்ல. சொந்த அனுபவத்தின் ஊடாக &#8211; எழுதுபவரையும் வரலாற்றின் ஒரு பகுதியாக்கி மேற்கொள்ளப்படும் பதிவும் அல்ல.
அதே சமயம், இது நமது மனதையெல்லாம் குடைந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் தேடும் முயற்சி. ஏன் நாம் தோற்றுப் போனோம்?
இதுவே நாம் பதில் காண முனையும் கேள்வி.
2000 ஆண்டு புது யுகத்தில் நுழைந்த போது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/tholvi.jpeg"><img class="alignleft size-medium wp-image-29" title="tholvi" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/tholvi-300x240.jpg" alt="" width="300" height="240" /></a>காரணம் தேடும் கட்டுரைத் தொடர்&#8230;.</p>
<p>நுழைவாயிலில்&#8230;..</p>
<p>நமது சமகால நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சிதான் இது. உணர்ச்சிவயப்பட்டோ, அல்லது பரபரப்புத் தேடியோ மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியல்ல. சொந்த அனுபவத்தின் ஊடாக &#8211; எழுதுபவரையும் வரலாற்றின் ஒரு பகுதியாக்கி மேற்கொள்ளப்படும் பதிவும் அல்ல.</p>
<p>அதே சமயம், இது நமது மனதையெல்லாம் குடைந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் தேடும் முயற்சி. ஏன் நாம் தோற்றுப் போனோம்?</p>
<p>இதுவே நாம் பதில் காண முனையும் கேள்வி.</p>
<p>2000 ஆண்டு புது யுகத்தில் நுழைந்த போது ஒரு வெற்றிப் பெருமிதத்துடன் தான்; நாம் இருந்தோம். வெற்றிக்கான சகல அடித்தளங்களையும் கொண்டிருந்ததாகவே உணர்ந்தோம். இருந்தும் ஒரு பத்தாண்டுக் காலத்தில் நாம் தோற்றுப் போனோம்.</p>
<p><strong>ஏன் இந்தத் தோல்வி? </strong></p>
<p>நாம் தோற்கவில்லை; இது ஒரு பின்னடைவு தான் என்று எம்மை நாமே ஆறுதல் படுத்திக் கொள்வது &#8211; நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது போலத் தோன்றுகிறது. பின்னடைவுக்கும் தோல்விக்கும் இடையே தெளிவான வேறுபாடு உண்டு. ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் பின்னடைவு பல்வேறு காரணங்களால் நொதிப்படைந்து, சமர்களில் (Battles) ஏற்படும் தோல்விகளால் கூடுதலாக வெளிப்படும். உதாரணமாக, யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்கும் சமரில் விடுதலைப்புலிகள் 1995-96 களில் தோல்வியடைந்து வன்னிப் பெருநிலத்திற்குப் பின்வாங்கியபோது போது நாம் தோல்வியடையவில்லை. அது ஒரு பின்னடைவு.</p>
<p>இத்தகைய பின்னடைவு பல விடுதலைப் போராட்டங்களில் ஏற்பட்டவை தான். உதாரணமாக, 1970 களின் பிற்பகுதிகளில் எரித்திரியப் போராளிகள் தலைநகர் அஸ்மாராவைக் கைப்பற்றி வெற்றிக்கனியைப் பறிக்கவிருந்த சமயத்தில் தனது அனைத்துலகக் கூட்டாளிகள் துணையுடன் எதியோப்பியா மாபெரும் தாக்குதல் முன்னெடுப்பைச் செய்தது. இச் சமரில் எரித்திரியப் போராளிகள் தோல்வியடைந்து &#8216;நக்பா&#8217; (Nakfa) எனும் வட எரித்திரியப் பகுதிக்குப் பின்வாங்கினர். இது தோல்வியல்ல. ஒரு பின்னடைவு. இப் பகுதியில் இருந்து போரை வழிநடத்தி 1991 இல் தலைநகர் அஸ்மாராவை மீட்டு முழு எரித்திரியாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1993 இல் எரித்திரியா தனிநாடாகியது.</p>
<p>போராட்டத்தைத் தாங்கி நின்று வெற்றிக்கு வழிவகுத்த &#8216;நக்பா&#8217; பிரதேசத்திற்கு நன்றியாகவும், தமது வீரம் செறிந்த போராட்டத்தின் குறியீடாகவும் எரித்திரிய நாணயத்திற்கு (currency) &#8216;நக்பா&#8217; எனவும் அவர்கள் பெயரிட்டனர்.</p>
<p><strong>இதே தர்க்கத்தில், தமிழீழத்தின் நாணயமாக &#8216;வன்னி&#8217; ஆக முடியாமல் போனது ஏன்?</strong></p>
<p>இக் கேள்விக்கு அகப் புறக் காரணங்களை ஆராய்ந்து பதில் தேட இக் கட்டுரைத் தொடர் முனைகிறது.</p>
<p>போராட்டங்களில் ஏற்படும் பின்னடைவின் போது அதே போராட்ட இயக்கம் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மீண்டும் முன்னேறுவதற்கான வாய்ப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வாறு சுதாகரித்துக் கொண்டு முன்னேற முடியாத அளவுக்கு போராட்ட இயக்கம் அழித்தொழிக்கப்பட்டுத் துவம்சம் செய்யப்படுமாயின் அதன் பெயர் பின்னடைவு அல்ல. தோல்வி. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் களத்தில் நடந்தது இது தான்.</p>
<p>போரில் நாம் தோல்வியடைந்திருக்கிறோம் ஆனால் போராட்டத்தில் அல்ல. போராட்டத்திற்கு இது ஒரு பின்னடைவு. ஆனால் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் தொடர்கிறது. புதிய வடிவம் எடுக்கிறது. இந்த வாதம் ஓரளவு தர்க்கபூர்வமானது தான். ஆனால்; நமது இலக்கையடையும் முயற்சியினை நாம் கைவிடவில்லை என்பது மட்டும் எடுத்து வந்த முயற்சியில் நமக்குக் கிடைத்த தோல்வியின் பாதிப்பைக் குறைத்து மதிப்பிட வழிவகுத்து விடக் கூடாது. மிகைமதிப்பீடோ அல்லது குறைமதிப்பீடோ மேலும் நமது வீழச்சிக்கே வழிவகுக்கும்.</p>
<p><strong>ஈழத் தமிழர் வரலாற்றில் இது தான் நமக்கு ஏற்பட்ட முதல் தோல்வியா?</strong></p>
<p>இது குறித்து 13.12.2009 தினக்குரல் பத்திரிகையில் செல்வராஜா தனபாலசிங்கம் எழுதிய கட்டுரையில் கூறப்பட்ட ஒரு விடயம் நம் கவனத்தை ஈர்க்கிறது.</p>
<p>&#8216;இன்று, நேற்றல்ல பல நூற்றாண்டுகளாய் தமிழ் பேசும் மக்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகின்றனர். ஆதலால் இத்தோல்விகளுக்கான காரணங்களை உள்ளும், புறமும் திறந்த மனதுடன் தேடிக் கண்டறிய வேண்டும். இராமநாதன்களும் தோல்வி கண்டனர், அருணாச்சலங்களும் தோல்வி கண்டனர், பேரின்பநாயகங்களும் தோல்வி கண்டனர், பொன்னம்பலங்களும் தோல்வி கண்டனர், செல்வநாயகங்களும் தோல்வி கண்டனர், அமிர்தலிங்கங்களும் தோல்வி கண்டனர், இறுதியாக பிரபாகரன்களும் தோல்வி கண்டனர். இந்த, ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட தோல்விகள் மட்டுமல்ல, இதற்கு முற்பட்ட நூற்றாண்டுகளும் தோல்விகளின் கதை கூறும் நூற்றாண்டுகளாகவே உள்ளன. ஆதலால் இத் தோல்விகளுக்கான காரணங்களை நீண்ட வரலாற்றுப் பின்னணியில் வைத்து கண்டறிவதன் மூலமே அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நாம் போக முடியும்.&#8217; (&#8216;தமிழ்க் கூட்டமைப்பின் தயக்கம்;&#8217; தினக்குரல் 13.12.2009, பக்கம் 12)</p>
<p>இங்கு வரலாற்றுத் தோல்வி பற்றிப் பேசுவது சுருண்டு துவண்டு படுப்பதற்கல்ல. மாறாக, இதற்கான காரண காரியங்களை ஆய்வு செய்து அப் பட்டறிவிலிருந்து நமது இலக்கு நோக்கி முன்னேறுவதற்கான திசையைக் கண்டறிந்து அத் திசையில் பயணிப்பதற்காகத்தான்.</p>
<p>தோல்வி மனப்பான்மைக்கும் தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வுக்கும் இடையே வேறுபாடு உண்டு. தோல்வி மனப்பான்மை சரணாகதியை நாடிச் செல்லும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்;து ஆக்கபூர்வமாகச் சிந்திக்கும். தோல்வி மனப்பான்மை சமூக வளர்ச்சிக்குப் பாதகமாக அமையும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வு வரலாற்றை முன்னோக்கித் தள்ள உந்து சக்தியாக விளங்கும். தோல்வி குறித்த அரசியல் விழிப்புணர்வின் பாற்பட்டுத்தான் இத் தொடர் கட்டுரை எழுகிறது.</p>
<p>ஒரு மேலாதிக்கத்தை நமது பொது அறிவு (commonsense) எதிர்ப்பின்றி இயல்பாக ஏற்றுக் கொண்டுவிடின் அங்கு மேலாதிக்கம் (hegemony) நிறுவப்பட்டுவிடும். சிறிலங்காவின் சிங்கள ஆட்சியை ஈழத்தமிழரின்; பொது அறிவு எதிர்ப்பேதுமின்றி இயல்பாக ஏற்றுக் கொண்டுவிடின் சிங்கள மேலாதிக்கம் வெற்றி பெற்றுவிடும். தோல்வி மனப்பான்மையும் எம்மால் இனியேதும் செய்யமுடியாது என்ற கையறுநிலையும் சிங்கள மேலாதிக்கத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்குத் தள்ளிவிடவும்கூடும்.</p>
<p>இதனால் தோல்வி பற்றிப் பேசுவது குறித்து சிலர் அச்சமுறுகின்றனர். தோல்வி பற்றிப் பேசுவதே சிங்கள மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத் துணைபுரிந்து விடும் என இவர்கள் வாதிடுகின்றனர். பல்வேறு வாதங்களைக்கூறி விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை இவர்கள் உயிரோடு வைத்திருக்க முனைவதன் அரசியல் காரணம் இங்கிருந்தும் தான் எழுகிறது. 2009 ஆண்டு மே மாதம் முதல் வாரம் நண்பர் ஒருவர் கூறிய வார்த்தை நினைவுக்கு வருகிறது. &#8216;இப்போதைக்குத் தலைவர் தப்பி விட்டால் போதும். அவர்கள் வெற்றி கொண்டாட முடியாது&#8217;. தற்போது அவர்கள் வெற்றி கொண்டாடி முடித்து விட்டனர். உலக நாடுகள் அனைத்தும் பிரபாகரன் மறைவை தமது ஆவணங்களில் ஐயம் திரிபறக் குறித்துக் கொண்டும் விட்டனர். ஆனால் எம்மவர்களில் சிலர் தலைவர் உயிரோடிருந்து போராட்டத்தை வழிநடத்துவதாகவும் உரிய நேரத்தில் வெளியே வருவார் எனவும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் போக்கு நமக்கு எந்த வகையிலும் ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை. நாம் ஓர் அறிவுபூர்வமான சமூகம் என்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறியுமல்ல.</p>
<p>Tamil Nation இணையத்தின் ஆசிரியரும் அறிஞருமான, திரு நடேசன் சத்தியேந்திரா அவர்கள் பிரபாகரனின் மறைவுக்கு மரியாதை செலுத்தி தனது இணையத் தளத்தை 30 நாட்கள் மூடி வைத்திருந்தார். இது குறித்து தனது இணையத்தில் அவர் 18.06.2009 அன்று பின்வருமாறு குறிப்பிடுகிறார்.</p>
<p>”Tamilnation.org கடந்த ஒரு மாத காலமாக – வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மறைந்த 17.05.2009 க்கு அடுத்த தினத்திலிருந்து 30 நாட்களுக்கு தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தது. இது இனிவரும் தலைமுறைத் தமிழர் நெஞ்சமெல்லாம் அந்நிய ஆட்சிக்கு எதிரான தமிழர் போராட்டத்தின் குறியீடாக, காலத்தால் சாவடையாது நிறைந்து வாழப் போகும் ஒரு தேசியவீரனின் மறைவுக்கு மரியாதை செலுத்துதற்கான காலமாகும். இத்தகைய மரியாதைக் காலங்கள் துயர்பகிர்தலுக்கு உரியவை மட்டுமல்ல. நாமெல்லாம் நம்மை நாமே உள்ளுணர்ந்து கொள்வதற்கானவையுமே.. ” (http://www.tamilnation.org/comments.htm) – (மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது)</p>
<p>இக் கட்டுரையின் மையமாக ஈழத் தமிழர் தேசத்தின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அமைகிறது. இதனால் கட்டுரையின் முக்கிய பேசுபொருளாக விடுதலைப்புலிகள் இயக்கமும் அதன் தலைவர் பிரபாகரனும் அவரது அரசியலும் அணுகுமுறையும் அமையப் போகிறது. பிரபாகரன் அவர்களது வீரச்சாவினை ஏற்று &#8211; ஒரு போராளியாக &#8211; ஈழத்தமிழர் தேசத்தின் தலைவராக &#8211; தனது சரிகளோடும் தவறுகளோடும் அவர் வாழ்ந்த ஏறத்தாழ 4 தசாப்த கால போராட்ட வாழ்வுக்கு இக் கட்டுரை மதிப்பளிக்கிறது.</p>
<p>இதே வேளை எந்த அரசியல் மாந்தரையும் அவரவர் வகித்த அரசியல் பாத்திரங்களையும் சமகாலத்தில் மட்டும் வைத்து எடைபோட முடியாது. வரலாறு தான் இதனை எடை போட வேண்டும். அவர்கள் தேசிய வீரர்கள் எனக் கௌரவிக்கப்படுவதும் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்படுவதும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்படுவதும் வரலாற்றின் போக்கிலேயே தீர்மானிக்கப்படும். வரலாற்றின் இப் பாத்திரம் தொடர்பான கவனத்தையும் இக் கட்டுரைத் தொடர் தன்னகத்தே கொண்டுள்ளது.</p>
<p>எக் காரணத்திற்காகவும் மக்களை போலி நம்பிக்கைக்குள் ஆழ்த்துவதை இக் கட்டுரை கடுமையாகக் கண்டிக்கும். இயன்ற வரை உண்மைகளைத் தேடித் திரட்டி அவற்றைப் பகுப்பாய்வு செய்து கருத்துக்களாக முன் வைக்கும். உண்மைகளின் சார்புத்தன்மை குறித்த அக்கறையும் இக் கட்டுரைக்கு உண்டு. இதனால் தனது &#8216;தகவல் மூலம்&#8217; தொடர்பாகவும் தனது சார்புத் தன்மை தொடர்பாகவும் கேள்வி எழுப்பி எழுப்பி &#8211; அதனைத் திரும்பிப் பார்த்துப் பார்த்தே இக் கட்டுரையாளர் கட்டுரையினை எழுதுகிறார். பிரெஞ்ச் அறிஞர் பியரே போர்டியோ (Pierre Bourdieu) கவனத்திற் கொண்ட methodological reflexivity இக் கட்டுரை தொடர்பில் ஓரளவுக்காவது பயன்படுத்தப்படுகிறது.</p>
<p>மேற் குறிப்பிடப்பட்ட தினக்குரல் கட்டுரையில் குறிப்பிட்டவாறு, நூற்றாண்டு காலத் தோல்விக்கான காரணங்களை இக் கட்டுரை ஆய்வு செய்யவில்லை. ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் 2000 – 2009 ஆண்டுவரையிலான காலப்பகுதியையே இக் கட்டுரைத்தொடர் தனது காலவெல்லையாகக் கொள்கிறது. இருந்தும் தேவையேற்படின் பின்னோக்கியும் முன்னோக்கியும் பயணித்து மீளவும் தன்னிடம் நோக்கிக் கட்டுரைத்தொடர் திரும்பும். ஒரு காலஅட்டவணை ஒழுங்கிலும் (chronological order) இக் கட்டுரை பயணிக்கப்போவதில்லை. தான் கூறமுனையும் விடயத்திற்குத் தேவையான உதாரணங்களையும் அனுபவங்களையும் வெவ்வேறு காலப்பகுதியிலிருந்து திரட்டி வரும்.</p>
<p>இக் கட்டுரை அரசியல் விவாதங்களை ஊக்குவிக்கிறது. இக் கட்டுரைத் தொடரில் குறிக்கப்படும் கருத்துக்களுக்கு மாற்றான கருத்துக்களும் எழுதப்படும் போதே அரசியல் விவாதங்கள் பிறக்கும். ஆக்கபூர்வமன விவாதங்கள் அறிவுக் கண்ணைத் திறக்கும்.</p>
<p>இக் கட்டுரைத் தொடரில் தனிப்பட்ட வசைபாடல்கள், சேறுபூசல்கள் இடம் பெற மாட்டாது. இதே போன்று விவாதங்களும் நாகரீகமான முறையிலேயே அணுகப்படும். பொங்கலன்று ஆரம்பமாகும் இக் கட்டுரைத் தொடர் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வெளிவரும்.</p>
<p>23.01.2010 சனிக்கிழமை அன்று இக் கட்டுரைத்தொடரின் முதல் அங்கத்துடன் சந்திப்போமோ நண்பர்களே! நன்றி.</p>
number of view: 8258]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/16/feed</wfw:commentRss>
		<slash:comments>590</slash:comments>
		</item>
		<item>
		<title>பொங்கி வருகின்ற புதுவெள்ளம்</title>
		<link>http://eelam.net/index.php/archives/14</link>
		<comments>http://eelam.net/index.php/archives/14#comments</comments>
		<pubDate>Sun, 17 Jan 2010 14:40:25 +0000</pubDate>
		<dc:creator>இரவி அருணாசலம்</dc:creator>
				<category><![CDATA[பேசும் படம்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=14</guid>
		<description><![CDATA[புதுவெள்ளம் பாயுமாற் போலத்தான் அது இருக்கிறது. இது புதுவெள்ளம் தான் என்று தெரிந்தே தான் சொல்கிறேன். அடிக்கடி அல்லது விட்டு விட்டுப் பாய்வதனால் அது பழைய வெள்ளமாகி விடாது.
1930களில் தமிழ்த் திரைப்படங்கள் பேசாப் படங்கள் வரத் தொடங்குகின்றன. (பேசாப் படங்கள் என்றால் பிறகென்ன &#8216;தமிழ்ப்&#8217; படங்கள்?) இவ்வாறு தொடங்கி வரலாறு எழுதுவது என் பணி அல்ல. நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்ற போது அதனைச் செய்கின்றேன் அல்லது ஆய்வு மாணவர்கள் அதனைச் செய்யட்டும். என் எண்ணம் இப்போது [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/pongi.jpeg"><img class="alignleft size-medium wp-image-33" title="pongi" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/pongi-300x240.jpg" alt="" width="300" height="240" /></a>புதுவெள்ளம் பாயுமாற் போலத்தான் அது இருக்கிறது. இது புதுவெள்ளம் தான் என்று தெரிந்தே தான் சொல்கிறேன். அடிக்கடி அல்லது விட்டு விட்டுப் பாய்வதனால் அது பழைய வெள்ளமாகி விடாது.</div>
<p>1930களில் தமிழ்த் திரைப்படங்கள் பேசாப் படங்கள் வரத் தொடங்குகின்றன. (பேசாப் படங்கள் என்றால் பிறகென்ன &#8216;தமிழ்ப்&#8217; படங்கள்?) இவ்வாறு தொடங்கி வரலாறு எழுதுவது என் பணி அல்ல. நான் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கின்ற போது அதனைச் செய்கின்றேன் அல்லது ஆய்வு மாணவர்கள் அதனைச் செய்யட்டும். என் எண்ணம் இப்போது பாய்கின்ற புதுவெள்ளம் பற்றியது.</p>
<p>இப்போது இரண்டு, மூன்று வருடங்களாக சில நல்ல திரைப்படங்கள் வந்திருக்கின்றன. (அவற்றில் இருக்கும் சிற்சில குறைகளை மீறியே பட்டியலும் இருக்கும்.) சேது, நந்தா, பிதாமகன், காதல், ராம், 7G ரெயின்போ காலனி, வெயில், காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சுப்பிரமணிய புரம், நான் கடவுள், கற்றது தமிழ், பூ, வெண்ணிலா கபடிக்குழு, பசங்க என்ற திரைப்படங்களை சிறந்த திரைப்படங்கள் என்ற பட்டியலில் சேர்ப்பேன். சில திரைப்படங்கள் இவற்றில் விடுபட்டிருக்கலாம்.</p>
<p>இவற்றிலும் கூட மிக முக்கியமான திரைப்படங்களாக சிலவற்றைக் கூறலாம். பிதாமகன், வெயில், புதுப்பேட்டை, பருத்தி வீரன், சுப்பிரமணிய புரம், நான் கடவுள், ஆகியன அத்தகையன. இவற்றை பொங்கி வருகின்ற புதுவெள்ளமாகத் தான் கணிக்கலாம்.</p>
<p>இதே நிலைமை எழுபதுகளின் இறுதியில் தொடங்கி எண்பதுகளின் முற்பாதி வரை இருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஒருவர் குதித்தார். அவர் பாரதிராஜா. அவர் வேறொன்றும் செய்தார். திரைப்படக் கலையகங்களுக்குள் இருந்த தமிழ் சினிமாவை வெளியில் இழுத்து வந்தார். தமிழ்ப் பண்பாட்டை அதில் படரவிட்டார்.</p>
<p>&#8216;என் இனிய தமிழ் மக்கள்&#8217; வெண்திரையில் இப்போது தங்களைக் காண ஆரம்பித்தனர். தங்களது சுகம், துக்கம், வெப்பியாரம், கோபம் என்ற உணர்வுகளை மாத்திரம் அல்ல, தமிழர் தம்மைப் பார்த்து சிரித்தனர். அழுதனர். வயல் வரம்புகளில் நடந்தனர். கொட்டில் வீடுகளின் மண்ணெண்னை விளக்கில் இராச் சாப்பாடு உண்டனர். இன்னும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு போகலாம். ஓன்று உண்மை. தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளை பாரதிராஜா படம் பிடித்தார்.</p>
<p>பாரதிராஜா போட்ட பாதை சிலருக்குப் பயன் தந்தது. இருவர் முக்கியமானவர்கள். மகேந்திரன், பாலு மகேந்திரா. இருவரும் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளைப் படைப்பாக்கியவர்கள் எனக் கூறல் முடியாது. ஆனால் பாரதிராஜா போட்ட பாதையில் பயணம் செய்தமையால் தமிழ்ச் சினிமாவை இன்னொரு தளத்துக்கு இட்டுச் சென்றார்கள். மிகச் சிறந்த தொழில் நுட்பவியலாளராக தன்னை இனம் காட்டிய பாலு மகேந்திரா படைப்பாளியாக பெரு வெற்றி பெறவில்லை என்றே சொல்வேன். முக்கி, முக்கித் தேடினாலும் மூன்று திரைப்படங்கள் பாலு மகேந்திராவை படைப்பாளியாக இனம் காட்டுகின்றன. மூன்றாம் பிறை, யாத்ரா (மலையாளம்), சந்தியா ராகம். ஆயினும் சிறந்த திரைப்படங்களை அவர் படைத்துள்ளார். கோகிலா (கன்னடம்), ஓளங்கள் (மலையாளம்), வீடு (தமிழ்), அழியாத கோலங்கள் (தமிழ்), என சில திரைப்படங்களைக் கூறலாம்.</p>
<p>பாலு மகேந்திராவைத் தொட்டு இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். ஓன்று, இதுவரை &#8216;கதைகளைப்&#8217; பார்த்து வந்த தமிழ் சினிமா இரசிகர்களை, சினிமாவை அதன் இலக்கணங்களுடன் பார்க்க வைத்தவர் பாலு மகேந்திரா. இரண்டு, அற்புதமான தமிழ்த் திரைப்படப் படைப்பாளிகளை அவர் உருவாக்கியிருக்கின்றார். இப்போது பொங்கி வரும் புதுவெள்ளத்தின் ஊற்று மூலம் எதுவென்றால் அது பாலு மகேந்திரா. (அது பற்றிப் பிறகு பேசுவோமே!)</p>
<p>மகேந்திரன் பற்றி இதில் குறிப்பிடாவிட்டால் நான் குறைபாடுடையவன். பாரதிராஜாவைத் தாண்டிக் குதித்த படைப்பாளி மகேந்திரன். ஒரு படம் &#8211; உதிரிப்பூக்கள் என்ற ஒரு திரைப்படம் போதும் தமிழ் சினிமா உள்ள வரை மகேந்திரன் பெயர் சொல்ல. தமிழ்த் திரைப்படங்களில் உனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எதுவென யாரேனும் ஒருவர் கேட்டால் தயக்கமின்றி உடனே சொல்வேன் &#8216;உதிரிப்பூக்கள்&#8217;.</p>
<p>மகேந்திரனின் மிகப்பெரிய பலம் திரைக்கதை தான். யாரும் ஏறெடுத்துப் பார்க்காத ஒரு நாவல் தான் உமா சந்திரனின் &#8216;முள்ளும் மலரும்&#8217;. அதனை வாசித்து முடிக்காமலேயே இடையில் நிறுத்திவிட்டு அதற்கான திரைக்கதையை எமுதினார். முள்ளும் மலரும் அற்புதமாக திரைப்படமாயிற்று. தமிழ்ச் சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன் போகிற போக்கில் எழுதிய ஒரு குறுநாவல் தான் சிற்றன்னை. அதுவே &#8216;உதிரிப்பூக்கள்&#8217; ஆயிற்று. ஆனால் அதுவேயல்ல. சிற்றன்னை குறுநாவலை வாசியுங்கள். உதிரிப்பூக்கள் திரைப்படத்தையும் பாருங்கள். மகேந்திரனின் திரைக்கதை எழுதும் வல்லமை உங்களுக்குச் சட்டெனப் புரியும்.</p>
<p>திரைக்கதை மாத்திரம் தான் அவரது திறமை என்றால் அதுதான் இல்லை. பாக்கியராஜையும் திரைக்கதை எழுதுவதில் திறமைசாலி என்கின்றனர் சிலர். நான் அதை மறுக்கமாட்டேன். ஆனால் எனக்கென்னவோ பாக்கியராஜ் மூளையால் திரைக்கதை எழுதுகின்றார். மகேந்திரன் படைப்புந்துதலால், உணர்வாய் எழுதுகிறார் என்றே படுகிறது.</p>
<p>மகேந்திரன், சினிமா மொழி தெரிந்த ஒரு படைப்பாளி என்பதையும் இங்கு குறித்தல் வேண்டும். &#8216;உதிரிப்பூக்கள்&#8217; திரைப்படத்தில் அதற்கான உதாரணங்கள் ஏராளம் நிரம்பிக் கிடக்கின்றன. &#8216;உதிரிப்பூக்கள்&#8217; என்ற ஒரு திரைப்படத்தை மாத்திரம் குறித்தல் மகேந்திரனுக்கு நாம் செய்யும் கைமாறு அல்ல. இன்னும் சில திரைப்படங்களையும் குறிப்பிடுகின்றேன். முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுக்கள், மெட்டி, நண்டு என்ற மகேந்திரனின் சில திரைப்படங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தமிழ் திரைப்பட வரலாற்றில் அவற்றுக்கான இடங்களையும் நீங்கள் வரையறை செய்யலாம்.</p>
<p>மகேந்திரன் அளவு என்றில்லாவிட்டாலும் தமிழ் சினிமாவில் இன்னொரு இயக்குனரும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார். அவர் மணிரத்தினம். நாயகன், தளபதி, அஞ்சலி, அலை பாயுதே போன்றவை மணிரத்தினத்தை மெச்ச வைத்தவை. ரோஜா, பம்பாய், இருவர், உயிரே போன்றவற்றுடன் என்னால் ஒன்றிப் போக முடியவில்லை. அதற்குக் காரணம் மணிரத்தினத்தின் அரசியலை என்னால் ஒத்துக் கொள்ள முடியாததே. தமிழ் தேசியத்தை மறுத்து இந்துத்துவா தேசியத்தை மணிரத்தினம் முன்னிறுத்துகிறார். அதனை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்?</p>
<p>நாம் இனி நிறைவுக்குப் போவோம். எண்பதுகளில் பொங்கினாற் போல இப்பொழுதும் ஒரு வெள்ளம் பொங்குகிறது. அப்போது பொங்கிய வெள்ளத்தில் புதுவிசையாய் இருந்தார் பாலு மகேந்திரா. இப்போது பொங்கும் வெள்ளத்தில் பாலு மகேந்திராவின் பரம்பரை புதுவிசையாக இருக்கின்றது. பாலா, அமீர், சசிகுமார், சமுத்திரக்கனி என்போரே இப்போதுள்ள புதுவெள்ளத்தில் பெரு வெள்ள மாணவர்கள். இப்புது வெள்ளம் வற்றக்கூடாது. வடியக் கூடாது. அதுவே எம் பெரு விருப்பு.</p>
number of view: 6939]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/14/feed</wfw:commentRss>
		<slash:comments>800</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு வீடு</title>
		<link>http://eelam.net/index.php/archives/11</link>
		<comments>http://eelam.net/index.php/archives/11#comments</comments>
		<pubDate>Sun, 17 Jan 2010 14:35:25 +0000</pubDate>
		<dc:creator>தமிழ்நதி</dc:creator>
				<category><![CDATA[இனிது இனிது]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=11</guid>
		<description><![CDATA[சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறவர்களின் வீடுகளும் பாடசாலைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பன. தோழர்களும்கூட.
அதற்கிணங்க, அப்பா வேலை இடமாற்றம் பெற்றுப் போகும் இடங்களுக்கு எங்களது பாடசாலையும் வீடும் பெயர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் புதிய [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/veedu.jpeg"><img class="alignleft size-medium wp-image-23" title="veedu" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/veedu-300x240.jpg" alt="" width="300" height="240" /></a>சிறுவயதில் வீடு என்பதன் பொருள் உறவுகளாகவே இருந்திருக்கிறது. அதற்கொரு பெறுமதி உண்டென்பதையோ, சமூக மதிப்பீட்டின் அளவுகோலாக வீடுகள் இருக்கக்கூடுமென்பதையோ அறியாதிருந்தேன். பெரிய இரும்புக் கதவுகளையும் உயரமான சுற்றுமதில்களையுமுடைய விசாலமான வீடுகளின் உள்ளறைகளில் யாரெல்லாம் வசிப்பார்கள் என்று, அந்த வழிகளால் கடைதெருவுக்குப் போகும்போது யோசித்துக்கொண்டே போவேன். அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறவர்களின் வீடுகளும் பாடசாலைகளும் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பன. தோழர்களும்கூட.</p>
<p>அதற்கிணங்க, அப்பா வேலை இடமாற்றம் பெற்றுப் போகும் இடங்களுக்கு எங்களது பாடசாலையும் வீடும் பெயர்ந்துகொண்டே இருந்தன. அந்தப் புதிய இடத்துக்கு அப்பாதான் முதலில் போவார். திரும்பிவந்து அவ்வூருக்குப் போவதன் அனுகூல-பிரதிகூலங்களைப் பற்றி இரவுகளில் அம்மாவோடு கதைப்பதைக் கேட்டபடி மெல்ல மெல்ல உறக்கத்திலாழ்வது நினைவிலிருக்கிறது. அதன்பிறகு வீட்டுத் தளபாடங்கள், ட்ரங்குப்பெட்டிகள், அப்பாவின் புத்தகங்கள் அடங்கிய மலத்தியோன் பெட்டிகள், பாய்கள், வாளிகள், தும்புத்தடி இன்னபிற சாமான்கள் பயணப்படும். கடைசியாக அம்மாவும் நாங்களும் அப்போது வளர்த்துக்கொண்டிருக்கும் பூனை அல்லது நாயும் போய்ச்சேர்வோம். புதிய வீடு பற்றிய எனது குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஏறி விளையாடுவதற்கும் ஒளிந்துகொள்வதற்கும் மரங்கள் இருக்க வேண்டுமென்பதற்கப்பால் சென்றதில்லை. வளர்ந்த பிறகு, மரங்களைப் பற்றிய எனது எதிர்பார்ப்பு மாறியிருந்தது. மழை பொழியும் மாலைகளில் யன்னல் வழியாகத் தெரியும் மரங்கள் இனம்புரியாத கிளர்ச்சியைத் தூண்டுவனவாக, சிருஷ்டித்துக்கொண்ட கற்பனாவுலகில் சஞ்சாரம் செய்ய உதவுவனவாக இருந்தன.</p>
<p>வாழ்ந்த வீடுகளில் எப்போதும் மறக்கமுடியாத பசுமையோடிருப்பது கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள திருவையாறு என்ற கிராமத்தில் வயல்நடுவில் அமைந்திருந்த ஒரு குடிசை. நினைக்கும்போதெல்லாம் அந்த வயல்கள் மனதுள் சிலிர்த்து அடங்குகின்றன. பிலாக்கொட்டைக் குருவிகளும் புளினிகளும் செம்போத்தும் இன்னுமின்னும் பெயர்தெரியாத பறவைகளும் பறக்கின்றன. பன்றிகள் கிழங்கு தேடிக் கிளறிய வேர்களின் வாசனை காற்றில் மிதந்துவருகிறது.. நீலமும் பச்சையும் அளவெடுத்துக் கலந்த நிறத்தில் அள்ளித்தெளித்த புள்ளிகளையுடைய தோகைமயிலொன்று வந்து காலெடுத்து ஆடிச்சுழன்றுவிட்டு, எறியும் தானியங்களை ஒயிலாகத் தலைதாழ்த்திக் கொத்தித்தின்கிறது. அன்றைக்கு வெளியிலும் குடிசையினுள்ளும் பெய்த மழை இன்னமும் நின்றபாடில்லை. அந்த இளம் வயதில், பொத்தல்கள் விழுந்த கூரையினூடே மினுங்கிக்கொண்டிருந்த நிலவு கிளர்த்திய துயரத்தின் பாடல் இடையறாது இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.</p>
<p>சொந்தவீடு வேண்டுமென்ற ஏக்கத்தை வெறியாக மாற்றியவர் இப்போது இந்த உலகத்தில் இல்லை. அவர் அன்று கொட்டிய வார்த்தைகளோவெனில் சாகாவரம் பெற்றவை. நினைக்கும்போதெல்லாம் சுயவிரக்கத்தைத் தூண்டுபவை. பணக்காரர்-ஏழைகள் என்ற இரண்டு வர்க்கங்கள் உலகில் இருப்பதை, அறியாச்சிறுமியொருத்தி அறிந்துகொண்ட நாளது. அப்போது இந்திய அமைதி காக்கும் படையினர்(?) ஈழத்தில் நிலைகொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கும் அமைதி காக்கும் படையினருக்கும் இடையில் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. யாழ்ப்பாண நகரப் பகுதியை விட்டுப் பெயர்ந்து சொந்தக் கிராமத்திலுள்ள உறவினர் வீடொன்றின் வாசற்படியில் கால்வைத்தபோது, “ஹவுஸ் புல்”என்றொரு கொடிய வார்த்தை எங்களை ஓடஓட விரட்டியது. திரையரங்குகளில் பாவிக்கப்படும் ‘ஹவுஸ் புல்’என்ற வார்த்தையை வீடொன்றில் கேட்டது அன்றுதான் முதற்தடவை. அன்று நானும் எனது பெற்றோரும் கண்ணீர வழியப் படியிறங்கி வேறிடம் தேடிப் போனோம்.</p>
<p>“அம்மா! எங்களுடைய ஊரில் எங்களுக்கு மட்டுமேன் சொந்தவீடில்லை?”என்ற என் கேள்விக்கு அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தா. அவவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர்த்துளிகள் சிதறிவிழுந்தன.</p>
<p>ஏழைகள் அகதிகளும் ஆவதைப் போன்ற கொடுமைக்கு இணையான துயரம் வேறில்லை. அந்நாட்களில் பணக்காரர்கள் கையில் காசோடும் நகைகளோடும் தற்காலிக தங்குமிடங்களை நாடிப்போகக்கூடிய அளவுக்காவது போரின் முன்னிமித்தங்களை ஊகிக்க முடிந்தது. இப்போதோவெனில் போர் சமரசம் உலாவும் இடமொன்றை உற்பத்தி செய்திருக்கிறது.</p>
<p>இன்று வன்னியிலிருந்து பலவந்தமாகப் பெயர்க்கப்பட்டிருக்கும் மக்களின் நினைவில் இனி ‘வீடு’என்ற பதத்தின் பொருள் எதுவாக இருக்கும்? வீடு என்று அவர்கள் எதை அழைத்தல் கூடும்? எஞ்சியிருக்கும் சுவரையா? முற்றமென அடையாளம் கண்டுகொண்ட இடத்தில் மிஞ்சியிருக்கும் ஒற்றை மரத்தையா? சுவரும் மரமும்கூட இல்லாத வெளியையா? காணிகளைப் பிரிக்கும் எல்லைக் கல்லையா? அவசரத்திற்குப் பிணங்களைப் புதைத்து வந்த இடத்தில் பின்னாளில் அடையாளம் கண்டுபிடிக்கவென நாட்டி வைத்துவிட்டு வந்த கல்லையா? வெங்காயப் பாத்திகளென உப்பி சிதைந்த உடல்களை உள்ளடக்கியிருக்கும் மண்மேடுகளையா? அகதிமுகாம்களில் விளையாடும் குழந்தைகளின் மனதில் வீடு என்னவாக இருந்துகொண்டிருக்கிறது?</p>
<p>உலகமெல்லாம் அகதிகளாக அலைந்து திரிபவர்களின் வீடு உண்மையில் எங்கே இருக்கிறது? புகலிட தேசங்களில் வங்கிக் கடனில் வாங்கி தவணைமுறையில் செலுத்தும் கட்டுப்பணத்தில் சிறுகச்சிறுக நமதாகிக்கொண்டிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் வீடுகள் உண்மையில் நமதேதானா?</p>
<p>ஐந்தாண்டுகளுக்கு முன் நான் அற்புதமான கனவொன்றைக் கண்டேன். பேருந்தில் தொலைநகரங்களுக்குப் பயணப்படும் வழிகளில் எதிர்ப்பட்ட வீடுகளையெல்லாம் கண்களுக்குள் தேக்கிவைத்துக்கொண்டேன். கொஞ்சநாட்களுக்கு கூரைகளும் முகப்புகளும் பளிங்குக்கற்கள் பதிக்கப்பட்ட அறைகளும் மட்டுமே எனது கனவில் வந்தன. ‘சொந்த ஊர்’என நாம் நினைத்திருந்த ஊர்கள் பேரினவாதத்தினால் சீட்டுக் கட்டுக்களைப் போல கலைத்துப்போடப்பட்ட பிற்பாடு, சொந்த ஊர் என வரித்துக்கொண்ட ஓரிடத்தில் வீடு கட்டும் வேலை ஆரம்பித்தது. அந்நாட்களில் சரியாக உறங்குவதில்லை. நள்ளிரவில் எழுந்திருந்து போய் “இந்த இடத்தில் கழிப்பறைப் பீங்கான் வரும். இந்த இடத்தில் தண்ணீர்க்குழாய் வரும். இந்த இடத்தில் படிகள் வரும். இந்த இடத்தில் சாமி மாடம் வரும்”என்று கற்பனித்தபடி அமர்ந்திருப்பேன். காற்றும் காலுரசும் பூனைக்குட்டியும் மட்டுமே அந்த இரவுகளில் எனக்குத் துணையிருந்தன. ஈற்றில் அந்தந்த இடத்தில் எல்லாம் அமைந்தன. மல்லிகையும் லசந்தராவும் தேமாவும் மாவும் பலாவும் செவ்விளநீரும் நெல்லியும் அம்பறலங்காய் மரமும் துளிர்த்தும் பூத்தும் காய்த்தும் சிரித்தன. ‘படியேறாதே’என்று ஒருகாலத்தில் விரட்டப்பட்ட ஏழை இளவரசி கண்ட கனவு கண்ணெதிரில் கல்லடுக்காய் நிமிர்ந்தது.</p>
<p>பிறகு மீண்டும் போர் வந்தது. துப்பாக்கிகள் துரத்தும் கனவுகள் வந்தன. கனரக டாங்கிகள் வந்தன. பேரிரைச்சலோடு நிலம்நோக்கித் தலைகுப்புறத் தாவி உயிர்கொத்தும் விமானங்கள் வானத்தில் திடும்மென்று முளைத்தன. நாங்கள் மீண்டும் தூரதேசங்களுக்குப் போனோம்.</p>
<p>எங்கோ வெகுதொலைவில் இப்போதும் இருக்கின்றன எங்களது வீடுகள். நாடேயற்றவர்களுக்கு வீடுகள் இருப்பது ஒருவகையில் முரண்நகையாகவே தோன்றுகிறது. அந்தரத்தில் தொங்கும் வீடுகள் அவை. பிரிந்துபோனவர்களின் நினைவிலூறிய கண்களைக் கொண்ட வீடுகள் வாசலை வெறித்துக்கொண்டிருப்பதாக, ஊருக்குப் போய் உயிரோடு திரும்பி வரமுடிகிறவர்கள் கதைகதையாகச் சொல்கிறார்கள். ஐதீகக் கதைகளைப் போல ஆகிக்கொண்டிருக்கின்றன மீள்திரும்ப முடியாத வீடுகளைப் பற்றிய கதைகள்.</p>
number of view: 1517]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/11/feed</wfw:commentRss>
		<slash:comments>397</slash:comments>
		</item>
		<item>
		<title>&#8216;ஜனாதிபதி ஆட்சி – சர்வாதிகாரத்துக்கு வாய்ப்பு&#8217;</title>
		<link>http://eelam.net/index.php/archives/9</link>
		<comments>http://eelam.net/index.php/archives/9#comments</comments>
		<pubDate>Sun, 17 Jan 2010 14:33:04 +0000</pubDate>
		<dc:creator>ஆதிசங்கரர்</dc:creator>
				<category><![CDATA[முகங்கள் / நிறங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://eelam.net/?p=9</guid>
		<description><![CDATA[முத்தையா விஜேந்திரனுடன் ஒரு நேர்காணல்.
கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. முத்தையா விஜேந்திரன் ஒரு இடதுசாரிச் செயற்பாட்டாளர். தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தவர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அக்கறையுடன் ஆதரிப்பவர். சமாதான காலத்தில் மானிடத்தின் ஒன்று கூடல் நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்ற போது அதில் முக்கிய பங்காற்றியவர். ஒரு சுயாதீனப் பத்திரிகையாளர். அவரது தாயார் சிங்கள இனத்தைச் சேர்ந்தவரானதால் சிங்களச் சூழலில் வாழ்ந்து, சிங்கள மொழியிலேயே கல்வி கற்றவர். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://eelam.net/wp-content/uploads/2010/01/aathi_janathipathi.jpeg"><img class="alignleft size-medium wp-image-35" title="aathi_janathipathi" src="http://eelam.net/wp-content/uploads/2010/01/aathi_janathipathi-240x300.jpg" alt="" width="240" height="300" /></a>முத்தையா விஜேந்திரனுடன் ஒரு நேர்காணல்.</strong></p>
<p>கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. முத்தையா விஜேந்திரன் ஒரு இடதுசாரிச் செயற்பாட்டாளர். தனது பாடசாலைக் காலத்தில் இருந்தே நவ சமசமாஜக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வந்தவர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அக்கறையுடன் ஆதரிப்பவர். சமாதான காலத்தில் மானிடத்தின் ஒன்று கூடல் நிகழ்ச்சி கொழும்பில் நடைபெற்ற போது அதில் முக்கிய பங்காற்றியவர். ஒரு சுயாதீனப் பத்திரிகையாளர். அவரது தாயார் சிங்கள இனத்தைச் சேர்ந்தவரானதால் சிங்களச் சூழலில் வாழ்ந்து, சிங்கள மொழியிலேயே கல்வி கற்றவர். தமிழ் மொழியில் ஓரளவு மட்டும் பேசக்கூடியவர் மிக நீண்டகாலமாக அகில இலங்கை ஐக்கிய மீனவர் சங்கத்தின் தலைவராக பணியாற்றுகின்றார். மீனவர்களின் பிரச்சினைகளை விஞ்ஞானபூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் வெளிப்படுத்தி வருகின்றார்.</p>
<p><strong>கேள்வி: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கும் என நினைக்கின்றீர்கள்?</strong></p>
<p>பதில்: சரத் பொன்சேகாவிற்கே அதிக வாய்ப்புக்கள் இருக்கும். என்றுதான் நான் நினைக்கிறேன். தென்னிலங்கையில் அதிக வாக்குகளைப் பெறக்கூடியவராக சரத் பொன்சேகாவே உள்ளார். தமிழ், முஸ்லீம், மலையக வாக்குகளும் அதிகளவில் அவருக்கு அளிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் காங்கிரசும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதனால் தமிழ், முஸ்லீம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் பொன்சேகாவுக்கு அளிக்கப்படலாம். மலையகத்தில் ஆறுமுகம் தொண்டமான் மகிந்த ராஜபக்க்ஷவினை ஆதரித்தாலும், மலையக மக்கள் தேசிய அரசியலில் ஜக்கிய தேசியக் கட்சியினையே ஆதரிக்க விரும்புவர்.</p>
<p><strong>கேள்வி: சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் சரத் பொன்சேகாவினை ஆதரிப்பர் என்று எந்த வகையில் கூறுவீர்கள்?</strong></p>
<p>பதில்: சிங்கள மக்கள் தற்போது ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.</p>
<p>முதலாவது, ஒரு தனிநபரிடம் ஆட்சி அதிகாரம் இருப்பதை சிங்கள மக்கள் விரும்பவில்லை. இதனால் ஜனாதிபதி அரசாங்க முறையினை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஜனாதிபதி ஆட்சி முறையே சர்வாதிகாரமாகத் தொழிற்படுவதற்கு வாய்ப்பினை வழங்கியுள்ளது. ஜனாதிபதி சர்வாதிகாரமாகத் தொழிற்படுவதால் ஜனநாயக நிறுவனங்களெல்லாம் பலவீனமடைந்துள்ளன. பாராளுமன்றம், அமைச்சரவை, நீதித்துறை, அரசியலமைப்பு பேரவை என எல்லாமே பலவீனமடைந்துள்ளன. தொடர்ச்சியாக ஜனநாயக நிறுவனங்கள் பலவீனமடைவதை மக்கள் விரும்பவில்லை.</p>
<p>இரண்டாவது, குடும்ப ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. இன்று அரசாங்கத்தின் ஆதிக்கம் மகிந்த ராஜபக்க்ஷ, பசில் ராஜபக்க்ஷ, கோத்தபாய ராஜபக்க்ஷ என்கின்ற மூன்று சகோதரர்களிடமே உள்ளது. அமைச்சர்கள் பெருமளவில் இருக்கின்றார்களே தவிர எவ்வித அதிகாரமும் அவர்களுக்குக் கிடையாது. தமது அமைச்சுக்களைப் பொறுத்தவரை கூட சுய தீர்மானமாக செயற்பட முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.</p>
<p>எலிகள் குட்டி போட்டது போல மந்திரிகளின் கூட்டம் பெருகி மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதையும் மக்கள் விரும்பவில்லை. இன்று ஆளும் கட்சியில் ஓரிருவரைத் தவிர அனைவருமே மந்திரிப் பதவிகளில் உள்ளனர். ஏனைய கட்சிகளிலிருந்து கழட்டி எடுக்கப்பட்ட எல்லாருக்கும் மந்திரிப் பதவிகள் கொடுக்கப்படுகின்றன. மந்திரிப் பதவி கொடுக்க வேண்டும் என்பதற்காக மக்கள் அறியாத பெயர்களிலெல்லாம் மந்திரிப் பதவிகள் கொடுக்கப்படுகின்றன.</p>
<p>மூன்றாவது, பெருகிவருகின்ற ஊழலாகும். மிகின் எயார் ஊழல் உட்பட பல ஊழல்களில் மகிந்த சகோதரர்கள் ஈடுபட்டுள்ளனர். இது சிங்கள மக்கள் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்த விடயம். சாதாரண மக்கள் பல்வேறு சான்றுகளுடன் அதனைத் தெரிவிக்கின்றனர். போர் நடந்ததினால் மக்கள் பொறுமை காத்திருந்தனர். இனிமேலும் பொறுமை காக்கும் நிலையில் மக்கள் இல்லை.</p>
<p><strong>கேள்வி: நீங்கள் கூறிய காரணங்களை விட போர் வெற்றி தானே கடந்த மாகாண சபைத் தேர்தல்களின் வெற்றியைத் தீர்மானித்திருந்தது? </strong></p>
<p>பதில்: நீங்கள் கூறுவது உண்மை தான். அந்த போர் வெற்றியின் மகாவீரன் சரத் பொன்சேகா தான். அவரது முறையான வழிநடத்தல் இல்லாவிட்டால் ஒருபோதும் போரில் வெற்றி கண்டிருக்க முடியாது. இது சிங்கள மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஜனாதிபதியே முன்னர் சரத் பொன்சேகா இல்லாவிட்டால் போரை வென்றிருக்க முடியாது எனக் கூறியிருந்தார்.</p>
<p>படையினர், பொலீசார் என்போரில் பெரும்பகுதியினரும் சரத் பொன்சேகாவை ஆதரிக்க உள்ளனர். ஒரு படைத் தளபதியினால் தங்களுடைய பிரச்சினையை அனுபவ ரீதியாக புரிந்து கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.</p>
<p>சரத் பொன்சேகா ஒரு நேர்மையான படைத் தளபதி என்பதினால் நேர்மையாக ஆட்சியை நடாத்துவார் என்ற கருத்தும. மக்களிடம் உண்டு. சரத் பொன்சேகாவிற்கு இராணுவ ரீதியான பலமும், அரசியல் ரீதியான பலமும் உண்டு. இந்த இரண்டும் மகிந்த ராஜபக்க்ஷவிற்கு இல்லை அவரிடம் இருப்பது அரச வளங்கள் மட்டுமே. இதனால் இயல்பாகவே சரத் பொன்சேகா மேல் நிலையில் உள்ளார்.</p>
<p>மகிந்த ராஜபக்க்ஷவிடம் அரசியல் ரீதியான பலம் இல்லாததினால் தென் மாகாணசபைத் தேர்தலிலேயே அதன் செல்வாக்கு வீழ்ச்சி கண்டிருந்தது.</p>
<p><strong>கேள்வி: சிங்கள ஊடகங்களில் பெரும்பாலானவை மகிந்த ராஜபக்க்ஷவினை ஆதரிக்கின்றரே? </strong></p>
<p>பதில்: உண்மை தான். சிங்கள ஊடகங்களில் அரச ஊடகங்கள், தனியார் ஊடகங்கள் என இரு வகையான ஊடகங்கள் உள்ளன. அரச ஊடகங்கள் முழுமையாக மகிந்தரையே ஆதரிக்கின்றன. தனியார் அச்சு ஊடகங்களிலும், திவயின போன்ற பத்திரிகைகள் மகிந்தரையே ஆதரிக்கின்றன. கிராமங்களில் அரச இலத்திரனியல் ஊடகங்களான ரூபவாகினி, ஐ.ரி.என் என்பவற்றை மட்டுமே பார்க்க முடியும்.</p>
<p>எனினும் மக்கள் உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளனர். தற்போது அரச ஊடகங்களை மக்கள் பெரிதும் பொருட்படுத்துவதில்லை.</p>
<p><strong>கேள்வி: சரத் பொன்சேகாவிற்கு நகர்புறங்களில் தான் ஆதரவு. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறப்படுகின்றதே? </strong></p>
<p>பதில்: ஆரம்ப காலங்களில் இந்நிலை இருந்தது உண்மைதான். மகிந்தரை கிராமத்து மனிதன் என சாதாரண மக்கள் நினைத்தனர். மகிந்த ராஜபக்க்ஷவும் கிராம மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்ட ஒரு கிராமத்தான் என்றே பிரச்சாரம் செய்தார். 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்க்ஷ வெற்றியடைவதற்கு இதுவும் பிரதான காரணங்களில் ஒன்றாக விளங்கியது.</p>
<p>ஆனால் தற்போது நிலமை மாறியுள்ளது. சரத் பொன்சேகாவும் ஒரு கிராமத்து மனிதனே! இதைவிட ஜே.வி.பி.யிற்கு வலிமையான அடித்தளங்கள் உள்ளன. ஊழியர்களும் நிறைய உள்ளனர். சரத் பொன்சேகாவும், ஜே.வி.பி.யினரும் சேர்ந்து கிராமிய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றனர். ஜே.வி.பி கிராமப்புறங்களில் நடாத்த இருந்த தனது 2000 சிறிய பிரச்சாரக் கூட்டங்களை தற்போது 6000ஆக உயர்த்தியுள்ளது.</p>
<p>கிராமப்புறங்களில் ஜக்கிய தேசியக் கட்சிக்கு பெரியளவில் வாக்கு வங்கி இல்லை .என்பது உண்மையே! எனினும் சரத் பொன்சேகாவும், ஜே.வி.பி.யினரும் இணைந்து அந்த வெற்றிடத்தை நிரப்பி விடுவர்.</p>
<p><strong>கேள்வி: சரத் பொன்சேகா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அவரது வெற்றி வாய்ப்பை பெரியளவில் பாதிக்காதா? </strong></p>
<p>பதில்: சரத் பொன்சேகா மீது பிரதானமாக இரண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். ஆயுத ஊழல் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ரகசிய உடன்படிக்கை என்பனவே அவ்விரு குற்றச்சாட்டுக்களாகும்.</p>
<p>ஆயுத ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பாக பெரியளவில் அரசாங்கம் பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்தது. அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்த போது சரத் பொன்சேகாவின் மருமகனின் பெயரில் உருவாக்கப்பட்ட கம்பனியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்டது என்பதே அந்தக் குற்றச்சாட்டாகும்.</p>
<p>இந்தக் குற்றச்சாட்டை அவர் ஜனாதிபதி வேட்பாளராக வந்த பின்னர் தான் அரசாங்கம் முன்வைக்கின்றது. ஏன் முன்னர் முன்வைக்கப்படவில்லை என சிங்கள மக்கள் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதன் உண்மைத் தன்மைக்கு அப்பால் மகிந்த சகோதரர்களின் ஊழல்களோடு ஒப்பிடும் போது அவர்களுக்கு இது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.</p>
<p>தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் உடன்படிக்கை என்ற குற்றச்சாட்டை பொறுத்தவரை வடக்கு-கிழக்கு இணைப்பு, சமஸ்டி தீர்வு, உயர் பாதுகாப்பு வலயம் நீக்கம் என்பவை தொடர்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாகவும், இரவி கருணாரத்ன வீட்டில் வைத்து அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாகவும் ஜாதீஹ கெல உறுமய இவ்வுடன்படிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்றையும் செய்துள்ளது.</p>
<p>ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இது அதிகளவில் தாக்கத்தைச் செலுத்தியதாகத் தெரியவில்லை. போர் வெற்றியின் பின்னர் சிங்கள மக்கள் இவ்வாறான பிரச்சாரங்களைப் பெரியளவிற்கு பொருட்படுத்துவதில்லை. அதுவும் தேர்தல் காலத்தில் இவற்றை ஒரு தேர்தல் பிரச்சாரமாகவே பார்க்கின்றனர்.</p>
<p><strong>கேள்வி: சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் அரசியல்,  சமூக, பொருளாதார ரீதியாக என்ன மாற்றங்கள் ஏற்படக்கூடும்? </strong></p>
<p>பதில்: இராணுவத்தை வெற்றிகரமாக ஒழுங்கமைத்து போரை நடத்தியது போல, அரசியல் சீரின்மையையும் மாற்றுவேன் என அவர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார். பாராளுமன்றத்திற்கும், மந்திரி சபைக்கும் அதிகாரங்களை வழங்குவதோடு, தெற்கிலும் வடகிழக்கிலும் போராட்டங்கள் எதுவும் ஏற்படாத அரசியல் சூழலை உருவாக்குவேன் எனக் கூறியிருக்கிறார்.</p>
<p>தெற்கில் இரண்டு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சி நடைபெற்றது. வட- கிழக்கில் 30 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டங்களுக்கு பின்னால் நியாயமான அரசியல் காரணிகள் உள்ளன. அக்காரணிகளை தான் நிவர்த்தி செய்வதாக கூறியிருக்கிறார்.</p>
<p>ஜே.வி.பி. ரணிலுடன் இணைந்து எதனையும் செய்யலாம் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. மகிந்தருடன் இணைந்தும் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தாம் இணையக் கூடிய மிகவும் பொருத்தமான நபர் எனக் கருதியே சரத் பொன்சேகாவுடன் கூட்டுச் சேர்ந்திருக்கின்றது.</p>
<p><strong>கேள்வி: அரசியல் தீர்வு தொடர்பாக சரத் பொன்சேகாவினால் என்ன செய்ய முடியும்? ஜே.வி.பியினர் இதற்கு எந்த அளவு ஒத்துழைப்பை வழங்குவர்? </strong></p>
<p>பதில்: சரத் பொன்சேகா அதிகாரப் பங்கீட்டிற்கு தயாராகவே இருக்கின்றார். சர்வதேச ரீதியாகவும் இவ்விடயத்தில் பாரிய அழுத்தம் உள்ளது.</p>
<p>அதிகாரப் பங்கீட்டு விடயத்தில் ஜே.வி.பி.யிலும் ஒரு மாற்றம் தெரிகிறது. இந்திய மாதிரியிலான அதிகாரப் பங்கீட்டினை ஏற்பதற்கு அவர்கள் தயாராகவே உள்ளனர். இதனை ஆதரிப்பதன் மூலம் தமிழ் மக்களிடம் தாங்களும் செல்லலாம் என்ற கருத்தும் ஜே.வி.பியிடம் உள்ளது. யுத்தம் முடிவடைந்த நிலையில் தமிழ் மக்களின் ஆதரவினைப் பெறுவதற்கும் ஜே.வி.பி பெரிதும் விரும்புகிறது. ஏனைய இனங்களின் ஆதரவு இல்லாமல் இலங்கை அரசியலில் தான் வலுவான நிலையில் இருக்க முடியாது என்பது ஜே.வி.பி.க்கு நன்றாகவே தெரியும்.</p>
<p>ஏற்கனவே தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனைகள் தொடர்பாக பல நடவடிக்கைகளை ஜே.வி.பி முன்னெடுத்துள்ளது. வன்னி அகதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கவேண்டும். கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என ஜே.வி.பி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலைப்பாட்டுடனேயே தென் மாகாணசபை தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியினையும் உயர்த்தியிருக்கின்றது. ஜே.வி.பியின் நிலைப்பாடுகள் அதன் தேர்தல் பெறுபேறுகளில் எந்தவித சரிவினையும் ஏற்படுத்தவில்லை.</p>
<p>இதைவிட அண்மைக்காலமாக தமிழ் மாணவர்களின் பிரச்சினைகளிலும் ஜே.வி.பியின் மாணவர் அமைப்பு அதிக அக்கறை செலுத்தி வருகின்றது. பேராதனைப் பல்கலைக்கழக மாணவி துவாரகா கைது விடயத்தில் அதனை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மன்றம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் மன்றம் என்பவற்றுடனும் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பு தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றது.</p>
<p>இனவாத நிலைப்பாட்டுடன் இருந்த ஜே.வி.பி தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளில் அக்கறை செலுத்தியமை அதன் ஒருகட்ட வளர்ச்சியே. அதன் இரண்டாம் கட்ட வளர்ச்சி என்பது தமிழ் மக்களுக்கான அதிகாரப் பங்கீட்டினை அங்கீகரிப்பதே. இயக்க விதியின் படி அந்த இடத்திற்கு ஜே.வி.பி சென்று தான் ஆகவேண்டும்.</p>
<p><strong>கேள்வி: வட-கிழக்கு இணைப்பு, சுனாமி பொதுக்கட்டமைப்பு ஆகிய தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான விடயங்களில் ஜே.வி.பி எதிராக செயற்பட்டிருந்தே! இதுபற்றி என்ன கூறுகிறீர்கள்? </strong></p>
<p>பதில்: விடுதலைப் புலிகள் பிரிவினையைக் கொண்டு வந்து விடுவார்கள் என்ற அச்சம் ஜே.வி.பியிடம் இருந்தமையாலேயே அந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தது. தற்போது விடுதலைப் புலிகள் களத்தில் இல்லாத நிலையில் அந்த பயம் இல்லை.</p>
<p>தற்போது இனங்களை ஐக்கியப்படுத்த வேண்டிய வரலாற்றுக் கடமை ஜே.வி.பி.யிற்கு வந்திருக்கின்றது. இது ஆரோக்கியமான ஓர் விடயமாகும். தமிழ் மக்களும் ஜே.வி.பி.யின் இந்த நிலைப்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.</p>
<p><strong>கேள்வி: அதிகாரப் பங்கீடு என வருகின்ற போது வட-கிழக்கு இணைப்பு, பொலிஸ் அதிகாரம், காணி அதிகாரம் என்பன தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான விடயங்களாக உள்ளன. இவற்றை எவ்வாறு சரத் பொன்சேகாவினால் தீர்த்து வைக்க முடியும்? </strong></p>
<p>பதில்: இவ்விடயங்களில் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும் என்பது உண்மை தான். ஜாதீஹ ஹெல உருமய, விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணி என்பன இதனை கடுமையாக எதிர்க்கவே பார்க்கும். மகிந்த ராஜபக்ஷவும் அவற்றை ஊக்குவிக்க முற்படுவார்.</p>
<p>ஆனாலும் ஜே.வி.பி.னால் சிங்கள மக்களை மாற்ற முடியும் அவர்களின் சிந்தனைகளை மாற்ற முடியும். சாதாரண சிங்கள மக்களுக்கு அதிகாரப் பங்கீடு பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. அதனை எதிர்க்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லை. விடுதலைப் புலிகள் களத்தில் இருந்த போது பேரினவாதிகள் அவர்களுக்கு அச்சமூட்டி எதிர்க்கச் செய்தனர். தற்போது அதனைச் செய்ய முடியாது.</p>
<p><strong>கேள்வி: பொருளாதார ரீதியாக என்ன மாற்றங்கள் இடம் பெறும்? </strong></p>
<p>பதில்: தற்போதுள்ள திறந்த பொருளாதாரக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் எவற்றையும் செய்ய முடியாது. எனினும் சீரழிந்த பொருளாதாரத்தை மேற்குலகின் ஆதரவைப் பயன்படுத்;தி மேல்நிலைக்கு கொண்டு செல்ல முடியும். ஜே.வி.பி.க்கு இந்த பொருளாதார முறையோடு கொள்கை ரீதியாக முரண்பாடு இருந்தாலும், பெரிய அளவிற்கு எதிர்க்காது. இதற்குள் தனது மக்களின் நலன்களைப் பேணப்பார்க்கும்.</p>
<p>குறிப்பாக கிராமப்புற மக்களின் நலன்களுக்கு உரிய இடத்தை கொடுக்க முயற்சிக்கும். விலை உயர்வினை இயன்றவரை குறைப்பதிலும் அக்கறை செலுத்தும். அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை உயர்த்த முயற்சிக்கும். இளைஞர்களுக்கான உதவிகளுக்கும் வலியுறுத்தல்களையும் மேற்கொள்ளும்.</p>
<p>ஜே.வி.பி இங்கு நிற்பதனால் ஐக்கிய தேசிய கட்சியினால் முழமையாக தமது பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முடியாது. சரத் பொன்சேகாவும், ஜே.வி.பி.யின் கோரிக்கைகளை அக்கறையுடனேயே பரிசீலிப்பார்.</p>
<p>குறிப்பு &#8211; இந்த நேர்காணலில் முத்தையா விஜேந்திரன் அளித்துள்ள பதில்கள் அவரின் சொந்தக் கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
number of view: 518]]></content:encoded>
			<wfw:commentRss>http://eelam.net/index.php/archives/9/feed</wfw:commentRss>
		<slash:comments>440</slash:comments>
		</item>
	</channel>
</rss>

