ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2

காரணம் தேடும் கட்டுரைத் தொடர்
அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை
16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண பொது மக்கள் உடைக்கு மாறிக் கொண்டிருந்தனர்.
மாற்றுடையில்லாத போராளிகள் பொது மக்களிடம் இரவலாக உடையைக் கேட்டு வாங்கி, தமது இராணுவச் சீருடையைக் களைந்து வீசிவிட்டு பொது மக்களாக தம்மை மாற்றிக் கொண்டிருந்தனர்.
சயனைட் குப்பிகளையும் தூர வீசியெறிந்தனர். தம் வசமிருந்த ஆயுதங்களையும் [...]

ஆயிரத்தில் ஒருவன் – தமிழில் ஆயிரத்தில் ஒன்றான சலனம்

தமிழுக்கு இது மிக மிகப் புதுசு. கதை, கதைக்களம், கதை சொன்ன விதம், காட்சிப்படுத்திய தன்மை, எல்லாம் தமிழ்த்திரைக்கு மிக மிகப் புதுசு. ஓர் ஆங்கிலப் படத்தைப் பார்த்தது போல இருக்கின்றது என்ற வகையான பேய்த்தனமான உளறல்கள் என்னிடம் இல்லை. ஆனால் இது தமிழில் புதிய தேடல், புதிய படைப்பு. முதலில் செல்வராகவனுக்கும், அவர்தம் குழுவினருக்கும் கைகளை இறுகப் பற்றியபடி மகிழ்வையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டு அடுத்த பந்திக்குப் போகின்றேன்.
அதற்கு முன் ஒரு வாக்கியம், தயவுசெய்து [...]

வணக்கம் “மாமன்னரே”!

“சித்த சுவாதீனமற்ற நிலைக்கான வரைவிலக்கணம் என்னவென்றால் ஒரு விடயத்தை ஒரேமாதிரியாக திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பது” – விஞ்ஞான மேதை அல்பேர்ட ஐன்ஸ்ரைன்.
இளம் சிங்களப்பாடகி சகலி ரோச்சனா கமகே பாடிய “ஆயுபோவெவ மகரஜனாய் …” (வணக்கம் மாமன்னரே) என்று ஆரம்பிக்கும் பாடல் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. போரில் தமிழர்களை வென்றதற்காக மகிந்த இராஜபக்சவை மாமன்னராக உருவகித்து பாடும் வாழ்த்துப்பாவாக இப்பாடல் அமைந்திருக்கிறது. இப்பாடலின் வரிகளில் உங்களுக்கு உடன்பாடில்லாவிட்டாலும் சகலியின் குரலினிமைக்காக பாடலை [...]

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…? துயர் 2

சொல்லியழ எவருமின்றி!
யுத்தத்தின் சுமையை கிழக்கும், வன்னியும் பெரிதும் சுமந்தன. கிழக்கு விதவைகள் நிறைந்த பூமியாய் மாறியது. வீட்டுக்கு வீடு கொல்லப்பட்ட குடும்பங்களாய் முதலில் கிழக்கு மாறியது. இராணுவம் அதிகம் வாய் வைத்ததும், கடித்து குதறியதும் முதலில் கிழக்கைத்தான். யுத்தத்தின் முழு வடுக்களும் கிழக்கில் படிந்திருந்தது. எதிரி கிழக்கைக் குறிவைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து முடித்தான்.
அடுத்து எதிரியின் கவனம் வன்னி மண்ணில் பாய்ந்தது. தமிழீழத் தேர் வன்னி மக்களின் முதுகில் உலகை வலம் வந்தது. [...]

யாரறிவார் வன்னிப் பெருந்துயரை…! துயர் 1

1. இராணுவத் தேரும், அரசியற் குதிரையும், இராஜதந்திரப் பாகனும்.
‘அனைத்தும் அரசியலுக்கு கீழ்ப்பட்டவை. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்’ என்று அரசியல் பற்றி தத்துவஞானி ஒருவரால் கூறப்பட்ட மகுட வாக்கியம் அரசியல் நுழைவாயிலுக்கான அகரமாய் உள்ளது.
யுகம் கடந்த விஞ்ஞானியான அயன்ஸ் ரீனே அணுகுண்டின் பிதாமகனாய் இருந்த போதிலும், அணுகுண்டைப் பிரயோகிப்பது பற்றிய தீர்மானத்தை அரசியல்வாதியே எடுக்கின்றான். எப்படியோ விஞ்ஞானம் அரசியலுக்கு கீழ்ப்பட்டும், கட்டுப்பட்டுமே இயங்க வேண்டியுள்ளது.
‘சட்டிக்குள் மசியும் கீரைக்குள்ளும் அரசியல் உண்டு’ என்ற வாக்கியம் மிகவும் கருத்துக்கு எடுக்கப்படக் கூடியது. [...]

ஈழப்போராட்டம் – தேங்கி நிற்கின்ற சுயவிமர்சனம்

யமுனா ராஜேந்திரன்
உலகப் புரட்சிகர இயக்கங்கள் என எடுத்துக் கொண்டால், அக்டோபர் புரட்சி தொட்டு இன்று வரையிலும் இரண்டு மிகப் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
முதலாவது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் நிகழ்ந்து முடிந்த சோசலிசத்தின் வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். இரண்டாவதாக சோசலிச சீனா முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரத்தையும், தனிநபர் சொத்துடமையையும் அங்கீகரித்திருப்பதனையும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் முன்னதாக ரஸ்யாவில் லெனின் பின்னரான ஸ்டாலினது அரசியல் காலம் பற்றியதும், சீனாவில் மாவோவினது அரசியல் காலம் பற்றியதுமான விமர்சனப் பின்னணி [...]

ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?

காரணம் தேடும் கட்டுரைத் தொடர்….
நுழைவாயிலில்…..
நமது சமகால நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சிதான் இது. உணர்ச்சிவயப்பட்டோ, அல்லது பரபரப்புத் தேடியோ மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியல்ல. சொந்த அனுபவத்தின் ஊடாக – எழுதுபவரையும் வரலாற்றின் ஒரு பகுதியாக்கி மேற்கொள்ளப்படும் பதிவும் அல்ல.
அதே சமயம், இது நமது மனதையெல்லாம் குடைந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் தேடும் முயற்சி. ஏன் நாம் தோற்றுப் போனோம்?
இதுவே நாம் பதில் காண முனையும் கேள்வி.
2000 ஆண்டு புது யுகத்தில் நுழைந்த போது [...]

தமிழின அழிப்பின் உச்சம்: ஐ.நா சாசனத்தை முன்வைத்து ஒரு நோக்கு

தனது இராணுவ இயந்திர மேலாதிக்க அடக்குமுறைக்கு ஊடாக தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவதும், தமிழினத்தை சரணாகதி அடைய வைத்தலுமே பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது.
காலங்காலமாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்களத் தலைமைகள், இராணுவ அடக்குமுறையைக் கருவியாகக் கொண்ட மூலோபாயத்தையே கையாண்டன. இன அழிப்பே பேரினவாத அரச இயந்திரத்தின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வந்துள்ளது.
இன்று தமிழர் தாயகம் முழுவதும் பௌத்த சிங்கள இன மேலாதிக்க ஆக்கிரமிப்பால் விழுங்கப்பட்டுள்ளது. முட்கம்பி வதைமுகாம்களாகவும், திறந்தவெளிச் [...]