ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா? பகுதி 2

காரணம் தேடும் கட்டுரைத் தொடர்
அங்கம் – 1. மூச்சடங்கிப் போகும் வேளை
16.05.2009. சனிக்கிழமை. மாலை 5 மணி. முள்ளிவாய்க்கால் பகுதி.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெருந்தொகையான போராளிகள் அவசர அவசரமாக தமது இராணுவ உடை களைந்து, சாதாரண பொது மக்கள் உடைக்கு மாறிக் கொண்டிருந்தனர்.
மாற்றுடையில்லாத போராளிகள் பொது மக்களிடம் இரவலாக உடையைக் கேட்டு வாங்கி, தமது இராணுவச் சீருடையைக் களைந்து வீசிவிட்டு பொது மக்களாக தம்மை மாற்றிக் கொண்டிருந்தனர்.
சயனைட் குப்பிகளையும் தூர வீசியெறிந்தனர். தம் வசமிருந்த ஆயுதங்களையும் [...]

ஈழம்: தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?

காரணம் தேடும் கட்டுரைத் தொடர்….
நுழைவாயிலில்…..
நமது சமகால நிகழ்வுகளை ஒரு வரலாற்றுப் பதிவாக்கும் முயற்சிதான் இது. உணர்ச்சிவயப்பட்டோ, அல்லது பரபரப்புத் தேடியோ மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியல்ல. சொந்த அனுபவத்தின் ஊடாக – எழுதுபவரையும் வரலாற்றின் ஒரு பகுதியாக்கி மேற்கொள்ளப்படும் பதிவும் அல்ல.
அதே சமயம், இது நமது மனதையெல்லாம் குடைந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் தேடும் முயற்சி. ஏன் நாம் தோற்றுப் போனோம்?
இதுவே நாம் பதில் காண முனையும் கேள்வி.
2000 ஆண்டு புது யுகத்தில் நுழைந்த போது [...]